தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் கமல் பேசியதாவது…
“என்னை பார்த்து நீங்கள் தலைவா என சொல்ல வேண்டாம், உங்களை பார்த்துதான் தலைவா என நான் கூறவேண்டும்.
நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.
நம் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.
அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
நம்மிடம் இருந்தே எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவோம்.
பட்டதாரிகளும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்”
நாட்டில் மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாரயம் பெருகும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பவர்கள் ஒரேடியாக சாவார்கள்.” என கமல் பேசினார்.
Govt Staffs and Ministers children must study in Govt Schools says Kamal