தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு கயல் ஆனந்தி சஞ்சய் இளவரசு தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.
மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
அப்போது நடிகை தீபா பேசியதாவது..
இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமார் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம்.
இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், அவரின் ரசிகை நான். இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் அதற்கு நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கணவன் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்துகிறார். பெண்கள் பலவீனமானவர்கள் தான்.. ஆனால் மனவலிமை கொண்டவர்கள்.. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..
ஆண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெண்கள் உங்கள் தோளோடு நிற்பார்கள். இதை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும்” என்று பேசினார் தீபா
Give protection to women.. Men should change – Deepa