Looking for next Mr. X.: இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கௌதம் மேனன்

Looking for next Mr. X.: இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசை ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் அவரது திரைப்படங்கள், இசை ஆர்வலர்களுக்கு எவர்க்ரீன் கிளாசிக் பாடல்களைப் பரிசளித்துள்ளன.

அவரது ‘Ondraga’ யூடியூப் சேனலில் வெளியான சுயாதீன பாடல்கள் ஒரே இரவில் சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன. தற்போது, அந்த சேனல் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

‘For the Love of Music’ (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டர் இப்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவை இது திறக்கிறது.

மேலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த இசை ட்ராக்ஸ் அவர்களின் சேனலில் இடம்பெறும். அவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும்.

இசையமைப்பாளர்கள் மற்றும் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குநர்களில் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒருவர்.

இசைஞானி இளையராஜா, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பெரிய இசை ஆளுமைகளுடன் பணிபுரிந்த அவர், தர்புகா சிவாவுடன் இணைந்து ‘மிஸ்டர். எக்ஸ்’ என்ற ஒரு சார்ட்பஸ்டர் ஆல்பத்தை கொடுத்துள்ளார்.

எனவே இப்போது, ​​”Looking for next Mr. X” என்ற டேக்லைன் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மத்தியில் தற்போது சென்சேஷனாகி உள்ளது.

Ondraga மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் அடுத்த திறமை வாய்ந்த இசைக்கலைஞர் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gautham Menon gives opportunities to new musicians

தங்கைக்கு ரெண்டு.. தனக்கு ஒண்ணு.; கோடிகளை கொட்டிய நடிகை ஆலியா பட்

தங்கைக்கு ரெண்டு.. தனக்கு ஒண்ணு.; கோடிகளை கொட்டிய நடிகை ஆலியா பட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஆலியா பட்.

இவரது நடிப்பில் உருவான கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்திரா & RRR ஆகிய 3 படங்களும் கடந்த ஆண்டுகளில் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

கடந்த ஆண்டு 2022 பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துக் கொண்டார் ஆலியா.

இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கவே ராஹா என பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மும்பையின் பந்திரா அருகேயுள்ள பாலி ஹில் பகுதியில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு புதிய வீட்டை வாங்கி இருக்கிறாராம். இந்த வீடு ரூ. 38 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது

இந்த அடுக்குமாடி குடியிருப்பை தனது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் என்கிற நிறுவனத்தின் பெயரில் வாங்கினார் ஆலியா.

மேலும் தனது தங்கை ஷாஹீன் பட்டிற்கு பரிசாக கொடுக்க மும்பை ஜூஹூ பகுதியில் ரூ 8 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களையும் விலைக்கு வாங்கி உள்ளாராம் ஆலியா.

ஆலியா பட்

alia bhatt buys a premium apartment worth rupees 38 crores in mumbai

விஜய் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட லோகேஷ் கனகராஜ் . எந்த படம் தெரியுமா?

விஜய் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட லோகேஷ் கனகராஜ் . எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் ‘சச்சின்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக பகிர்ந்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் பற்றி அறிந்ததும் அவரும் சில நண்பர்களும் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கியதாக அவர் கூறினார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் நடிப்பைப் பார்த்து பிரமித்து போனேன் என்றார்.

தனது நண்பர்கள் விஜய் மற்றும் ஜெனிலியாவுடன் காட்சியில் தோன்றியதாகவும், ஆனால் அவர் அதை தவறவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தற்போது வைரலாகி வருகிறது.

Did you know Lokesh Kanagaraj missed acting with Actor Vijay ?

தனுஷ் – வடிவேலு கூட்டணியை உறுதி செய்த பிரபல இயக்குநர்

தனுஷ் – வடிவேலு கூட்டணியை உறுதி செய்த பிரபல இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 ஆம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’ படத்திற்காக தனுஷ் மாரி செல்வராஜுடன் கைகோர்த்தார்.

இருவரும் மீண்டும் இணைவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் வேடத்தில் வடிவேலு நடிக்கவிருந்தார்.

ஆனால் சில காரணங்களால் 2009 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் இருந்து விலகி இருந்தார் வடிவேலு அதனால், தனுஷுடன் நடிக்கவில்லை.

இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் இப்போது இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் வடிவேலுவின் காம்போ நிஜமாகி உள்ளது.

Dhanush and Vadivelu combo to comes true with Mari Selvaraj’s

தளபதி 68 அப்டேட் : ஜிகர்தண்டா , பேட்ட இயக்குனருடன் இணையும் விஜய்.

தளபதி 68 அப்டேட் : ஜிகர்தண்டா , பேட்ட இயக்குனருடன் இணையும் விஜய்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அவரது கேரியரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் 68 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனியுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று முன்பே தெரிவித்தோம்.

இதனிடையே தளபதி 68 படத்தை பிரபல தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா மற்றும் ரஜினியின் பேட்ட படங்களை இயக்கியவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Is Vijay’s ‘Thalapathy 68’ director changed?

நடிகர் திலகம் மரத்துக்கு 70 வயசு.; சிவாஜி மகன் ராம் ஆஸ்பத்திரியில் ஆனந்தம்.!

நடிகர் திலகம் மரத்துக்கு 70 வயசு.; சிவாஜி மகன் ராம் ஆஸ்பத்திரியில் ஆனந்தம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். மேலும் படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

ராம்குமார்

இந்த நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது 1953 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் மூலம் பெற்ற தொகையை முழுவதும் நன்கொடையாக கொடுத்து யாழ்ப்பாணத்தில் முலாய் என்ற ஊரில் ஒரு மருத்துவமனை கட்ட உதவி புரிந்துள்ளார்.

ராம்குமார்

அந்த சமயம் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு மாமரத்தையும் நட்டு உள்ளார். தற்போது அந்த மாமரத்திற்கு 70 வயது ஆகிறது.

இந்த மரத்தின் நிழல் அடியில் நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் அமர்ந்து தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ராம்குமார்

Reason behind  Sivaji’s son Ram  Kumar happiness

More Articles
Follows