தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரது பேட்டி ஆவேசமாக மாறியது.
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது.
காவல்துறையினர் சீருடையில் இருக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
போலீசை அடித்தது, ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பை எரித்தது சமூக விரோதிகள்தான்.” என்றார்.
போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துக் கொண்டது எப்படி ரஜினிக்கு தெரியும் என ஒரு நிருபர் கேட்க, எனக்குத் தெரியும். எனக்கு எல்லாம் தெரியும் என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்ட இறுதியிலும் சமூக விரோதிகள்தான் அதை திசை திருப்பினார்கள்.
ஏன் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கேட்டார். அவரை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
எதற்கு எடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று ஆவேசமாக ரஜினிகாந்த் பேசி விட்டு சென்றார்.
For each issue protest should not be there says Rajini in angry way