தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2009ல் ‘ஈரம்’ என்ற ஹிட் கொடுத்த நடிகர் ஆதியும், இயக்குனர் அறிவழகனும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்துக்காக இணைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு ‘ஈரம்’ படத்தின் ஒரு பகுதியாக இருந்த தமன் இசையமைத்துள்ளார்.
திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.
மூணாறில் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்தது.
இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மழைகள் நிறைந்த மூடுபனி மற்றும் பள்ளத்தாக்கில், ‘சப்தம்’ படத்தின் மூணார் அட்டவணை முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
First schedule of Aadhi’s ‘Sabdham’ with wrapped up