பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annamalai ipsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்கவுள்ளார் என்பதை அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் ’நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

எனவே பலரும் தங்களின் இஷ்டப்படி கர்நாடகாவில் கம்பீரமாக பணியாற்றிய கர்நாடக சிங்கம் என அழைக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை என்பவர் தான் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறிவந்தனர்.

இது தொடர்பாக ரஜினி ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. ஆனால் ரஜினியை வம்பிழுக்கவே இப்படியொரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது…

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அந்த குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி எடுக்கும் முடிவும் நான் கட்டுப்படுவேன் என கூறினார்.

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha peter paulகடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

இந்த திருமணம் சர்ச்சையானது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம்.

இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில்…

‘சொல்வதற்கு நிறைய இருக்கு.. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் சக்தி மிக்கவர். நம்பிக்கையுடன் இருங்கள்.

எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமானது. எல்லாம் சரியாகிவிடும். கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு செல்ல ஆசைப்படும் மீரா மிதுன்

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு செல்ல ஆசைப்படும் மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun nithya nandhaஇந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா.

இவர் எவருக்கும் தெரியாத ஏதோ ஒரு இடத்திற்கு சென்று அங்கு கைலாசா என்ற நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்த நாட்டின் அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

மேலும் சில நாட்களாக ரிசர்வ் வங்கி ஆஃப் கைலாசா என்று வங்கியை தொடங்கி கரன்சிகளை அச்சடித்து வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா குறித்து மீரா மிதுன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா பற்றி நெகட்டிவான செய்திகளே வருகிறது. ஆனால் அவர் புதிய நாட்டை ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raiza wilsonகொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த நடிகர்கள் எனும் போது, நல்லதொரு தொழில்நுட்பக் குழு அமைந்தால் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வரிசையில் தனது தொழில்நுட்பக் குழுவினர், படக்குழு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜுவிடம் கேட்ட போது, “வேல்ராஜ் சார் (ஒளிப்பதிவாளர்), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் (இசையமைப்பாளர்), சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய ‘சூர்ப்பனகை’ படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் ‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.

டொவினோ தாமஸ் & குரு சோமசுந்தரம் கூட்டணியில் பன்மொழியில் உருவாகும் ‘மின்னல் முரளி’

டொவினோ தாமஸ் & குரு சோமசுந்தரம் கூட்டணியில் பன்மொழியில் உருவாகும் ‘மின்னல் முரளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

guru somasundaramபாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.

வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது.

இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார்.

பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.

“மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் குழுவான குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

மின்னல் முரளி மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவை பெற்றுள்ளது. படத்தின் சவால மிகுந்த கலை இயக்கத்தை, மிக வித்தியாசமான செட்டுகளை வடுவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத்.

அனைத்து வகை இசையிலும் அசத்தும் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனு மஞ்சித் பாடல் வரிகள் எழுதுகிறார்.

இப்படத்தின் எழுத்து பணிகளை செய்துள்ளனர் அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. படத்தின் படத்தொகுப்பை லிவிங்ஸ்டன் மேத்யூ செய்துள்ளார். விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஆண்ட்ரு D கிரஸ் செய்கிறார். ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் செய்துள்ளார். ஹாசன் வண்டூர் மேக்கப் செய்ய, J மெல்வி உடை வடிவமைப்பு செய்துள்ளார். சூப்பர் ஹீரோவுக்கான தனித்த உடைவடிவமைப்பை தீபாலி நூர் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ போஸ்டரை டிசைன் செய்துள்ளார் N T ப்ரதூள். கருத்து வடிவமைப்பை பவி சங்கர் செய்துள்ளார்.

தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை.; ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை.. அமைச்சர் அதிரடி

தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை.; ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை.. அமைச்சர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No permission for reopen theaters in TN says Minister Kadambur Rajuபொது மக்கள் திரையரங்குகளில் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது.

கிட்டதட்ட 5 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் தியேட்டர் நிர்வாகிகளும் அதனை சார்ந்த வணிகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

எனவே திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தமிழக அரசிடம் திரைத்துறை சங்கங்கள் வைத்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றும். கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

மேலும் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது. இதற்கு திரைத்துறையினர் தான் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No permission for reopen theaters in TN says Minister Kadambur Raju

More Articles
Follows