தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் வேதமானவன்.
ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம் இது.
இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொண்டுள்ளார்.
‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.
தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் கே. பாக்யராஜ் வேதமானவன் பட பாடல்களை வெளியிட்டார்.
கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
ஜாக்குவார் தங்கம் எந்த மேடையில் பேசினாலும் தமிழர்கள் மட்டும் தான் தமிழ் படங்களில் பணி புரிய வேண்டும் என சவுண்ட்டாக பேசுவார்.
ஆனால் அவர் காலங்களில் அவர் மற்ற மொழி படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது வேறுகதை.
இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் வகையில் வேதமானவன் இசை விழாவில் கலந்துக் கொண்ட கர்நாடகாவின் முன்னாள் கவர்னரும் முன்னாள் நீதிபதியுமான மோகன் (வயது 89) பேசியதாவது….
நான் கர்நாடகாவில் கவர்னராக இருந்தேன். ஓய்வு பெறும்போது நான் ஒரு தமிழராக இருந்தபோதும அந்த மக்கள் என்னை விடவில்லை.
காரணம் நம்பிப்கை. நல்ல நடத்தை தான். அங்கு மொழி தேவையில்லை. அதுபோல் கலைஞர்களுக்கும் மொழி பேதம் கிடையாது.
தமிழ் படத்தில் தமிழர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என கூறும் ஜாக்குவார் அவர்கள் தமிழ் சினிமாவை தமிழர்கள் மட்டும்தான் பார்க்கனும்? என கூற முடியுமா? அவரால் முடியாது.” என பரபரப்பாக பேசினார் இந்த 89 வயது முன்னாள் நீதிபதி மோகன்.