தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கும் படம் வேதமானவன்.
மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொள்கிறார்.
‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.
தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.
இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
வேதமானவன் படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குனர் கே. பாக்யராஜ் பேசுகையில்,
“நீதிபதியாய் இருந்து அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு, இலக்கியத் துறையிலும் அதிக ஈடுபாடோடு சுமார் 20 புத்தகங்கள் எழுதியுள்ளார் புகழேந்தி.
அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இப்போது திரை உலகிலும் நுழைந்துள்ளார்.
பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் திரைப்படம் எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்திய அவரது குடும்பம் கிரேட்!
நீதிபதி புகழேந்தியிடம் நல்ல ரசனை உள்ளது. குற்றம் தொடர்பான பின்னணி கொண்ட இந்த கதைக்கு ‘வேதமானவன்’ என்று ரசனையான டைட்டிலை வைத்துள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கும் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் புகழேந்தி ஐயாவை மனமார பாராட்டுகிறேன்” என பேசினார்.
Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgement