தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.
தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.
இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதனையடுத்து அந்த காட்சிக்கு விளக்கமளித்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த நிலையில், மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது.
அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் (பிரபாகரன்) பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Aaniye Pudingavenam Prasanna supports Dulquer in Dog Prabakaran issue
Namma oorla like how we use “aaniye pudingavenam” or “enna koduma saravanan” the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let’s not spread hate based on misunderstanding.