தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கமல் கூறியதால், அன்று முதல் கமலுக்கு பதிலடி கொடுப்பதே தமிழக அமைச்சர்களின் வேலையாகி விட்டது.
உங்கள் சினிமா துறை ஊழல்கள்களை முதலில் சரி செய்யுங்கள் என்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பள்ளிப் படிப்பை முடிக்காதவன் நான். அதனால் நீட் (மருத்துவ நுழைவுத் தேர்வ்) கொடுமை புரியவில்லை.
ஆனால் டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது. அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த வார்த்தை போர்களத்தை பார்த்த ரசிகர்கள், அரசை எதிர்த்தும், கமலை ஆதரித்தும் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது…
‘தரந்தாழாதீர். வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்’ என்று பதிவு செய்துள்ளார்.
Dont waste money for posters I will deal Ministers says Kamalhassan