தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்6-ந்தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன.
திமுக & காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
“மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும்.
எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.
திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.
8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும்.
திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு.
மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்” என வைகோ கூறினார்.
DMK allots 5 seats to MDMK ?