தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்லக்கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து தன் இலங்கை பயணத்தை ரத்து செய்தவதாக கூறி ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் ரஜினி என்பதை பார்த்தோம்.
ரஜினியின் இந்த முடிவை பாரதீய ஜனதா கட்சி விரும்பவில்லை.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில்…
“ரஜினிகாந்த் இலங்கை சென்றிருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அவர் ரத்து செய்துவிட்டார். ” என்று கூறினார்.
ஆனால் ரஜினியின் முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து, வாழ்த்தியுள்ளனர்.
அவர்களின் கருத்துக்கள் இதோ…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
“இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி. விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை.
ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். அவர் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை” என்றார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ…
“ரஜினியிடம் நான் தொலைபேசியில் பேசினேன். ஆனால் அதுகுறித்து நான் விளம்பரம் செய்யவில்லை.
மேலும் விளம்பரத்துக்காக ரஜினியின் பயணத்தை அரசியலாக்கவில்லை.
அவர் தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். தற்போது ரத்து செய்துள்ளார். அவர் ஒரு மாபெரும் மனிதர்” என்றார்.
அ.தி.மு.க அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்…
“தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி” என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…
“இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினிக்கு நன்றி.
அவர் முள்ளிவாய்க்கால் துன்பங்களை நேரில் கேட்டறிய வேண்டும்” என்றார்.
Political leaders reaction to Rajinis Srilanka trip cancellation