தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது.
அங்கு பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்து.
இதனையடுத்து பாஜக.வினரால் லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது.
இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடும் போது… ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.
பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா கூறியதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் உருவாகின.
முக.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரும் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
அதன்பின்னர்.. அந்த பதிவை நான் பதிவிடவில்லை. தனது பேஸ்புக் அட்மின்தான் பதிவிட்டார் எனக் கூறி எச்.ராஜா அந்த பதிவை நீக்கவிட்டார்.
இந்த சர்ச்சை குறித்து கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
`அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.
எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு’ என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் வைகோ.விடம் கேட்டபோது அவர் அவரது பாணியில் அனலாக பேசினார்.
கமல்ஹாசனுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் நண்பர்கள், ஊடகத்துறையினர் இது குறித்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல் நாங்கள் எப்படி போராட வேண்டும் என சொல்ல தேவையில்லை.
விழலுக்கிரைக்கவேண்டாம் என கூறியிருக்கிறார். அப்படி என்றால் வீணாக போராட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
54 ஆண்டுகாலமாக போராடி, சிறை சென்று அரசியல் செய்து வருகிறோம். எங்களுக்கு அவர் சொல்ல தேவையில்லை” என கடுமையாக பேசினார்.
Vaiko condemns Kamals new tweet about Periyar Statue issue