வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கும் வைகோ; விஷால் வாழ்த்து

வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கும் வைகோ; விஷால் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velu nachiyar stamp

வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.

இது வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும்.

இதுகுறித்து விஷால் பேசியதாவது…

வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார்.

அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார்.
முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும் , இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள்.

பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழ்அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம்.

நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலுநாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும், என்னை ஊக்குவித்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி.

அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை, புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

விழாவில் வைகோ பேசியது

தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார்.

நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை,நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்த்து வெற்றி பெற்ற வரலாற்றை, திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசியபோது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டிர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைபோல சகோதரி மணிமேகலைசர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார்.

இந்த காவியத்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம் இங்கே ஹைதரலியும் வேலுநாச்சியாரை சந்திகின்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

மரவர் சீமையில் மகாராணிக்கு வந்தனன் என்று புரியட்டும் என்னை தமைக்கையாக ஏற்று கொண்ட பாதுசாவுக்கு அவர்கள் நன்றி கூறியது.

படைபலத்தை கேட்டதும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு தமிழ் நாட்டுக்கு தேவை என்பதை நான் இங்கு நினைவுட்டுகிறேன்.

வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன் என்றார் வைகோ.

Politician VaiKo going to Produce biopic of Velu Nachiyaar

vaiko with velu nachiyar drama team

 

 

விஜய்.? விஷால்.? யாருடைய வாக்கு ஜெயிக்கப் போகிறது…?

விஜய்.? விஷால்.? யாருடைய வாக்கு ஜெயிக்கப் போகிறது…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalமெர்சல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எந்த மாற்றமும் இருக்காது. படம் சொன்னப்படியே வெளியாகும் என தேனாண்டாள் நிறுவனம் சார்பில் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

ஆனால் கேளிக்கை வரி பிரச்சினையால், சினிமா டிக்கெட் விலை உயர்வு விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதனால் சினிமா ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனவே யார் சொன்ன வாக்கு நிறைவேறப் போகிறது? என ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.

Mersal Diwali release and New movie release banned updates

நல்லவைகளின் மறுஉருவம் ரஜினி… – காலா நாயகி அஞ்சலி பாட்டீல்

நல்லவைகளின் மறுஉருவம் ரஜினி… – காலா நாயகி அஞ்சலி பாட்டீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali Patil shares her experience with Rajinikanth in Kaala movieரஞ்சித் இயக்கிவரும் சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், பங்கஜ் த்ரிபாதி, ஹ்யூமா குரேஷி, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரஜினியுடன் நடிப்பது குறித்து நடிகை அஞ்சலி பாட்டீல் கூறியதாவது…

“என் நடிப்பு திறமையைக் காட்ட காலா படத்தில் வாய்ப்பிருக்காது என்பது தெரியும்.

ஆனால் ரஜினியுடம் இணைந்து நடிக்க வேண்டும். அதில் கிடைக்கும் உற்சாகம் வேண்டும் என்பதற்காக ஒப்புக்கொண்டேன்.

அவர் நல்லவைகளின் மறுவடிவம். அவரைப் போன்ற மனிதர்களை கற்பனைக் கதைகளில் மட்டுமே கேட்டிருப்போம். பார்த்திருப்போம்.

ரஜினியை பார்க்கவே ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளும். அந்த மக்கள் வெள்ளத்தில் நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது” என கூறியுள்ளார்.

Anjali Patil shares her experience with Rajinikanth in Kaala movie

கோலிவுட்டின் ராசியான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது எப்படி?

கோலிவுட்டின் ராசியான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan became lucky actor in Kollywoodசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் கடந்த 2016ஆம் ஆண்டு விஜயதசமி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆனது.

அதன்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைக்காரன் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்தாண்டு 2017 டிசம்பர் மாதம்தான் வெளியாகவுள்ளது.

ஆனால் இந்த ஒரு வருடத்திற்குள் சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள் ஏதாவது ஒன்று வந்துக்கொண்டேதான் இருக்கிறது.

அது எப்படி? என்று கவனித்தீர்களா?

பெரும்பாலான படங்கள் டீசர், டிரைலர் அல்லது பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் வெளியிடுகிறார்.

இதனால் அவரை பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஓரிரு தினங்களுக்கு வரலட்சுமி நடிக்கும் சக்தி மற்றும் கார்த்திக் மற்றும் கௌதம் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

சற்றுமுன் கூட ஒரு பக்க கதை படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட்டார்.

நாளை அக். 12ஆம் தேதி உதயநிதி நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளார்.

இப்படி ஏதாவது ஒன்றை சிவகார்த்திகேயன் வெளியிட்டு அந்த படங்களின் விளம்பரத்திற்கு மறைமுகமாக உதவி வருகிறார்.

இது அவரின் நல்ல மனசை காட்டுகிறது எனலாம்.

மேலும் அவர் ராசியான நடிகர் என்றும் மாஸ் நடிகராக உருவாகி வருகிறார் என்பதால் அவர் மூலமாக வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan became lucky actor in Kollywood

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijay posterரஜினிகாந்த்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லமில்லாமல் இந்தியா முழுவதும் ரகிகர்கள் உள்ளனர்.

அண்மைகாலமாக இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று தமிழகத்தில் வேறு படங்கள் வெளியாகாது.

எனவேதான் இவரை சூப்பர் ஸ்டார் என இன்று வரை அழைக்கிறோம்.

இந்நிலையில் ரஜினிக்கு அடுத்த மாஸ் இடத்தை பிடித்து வருகிறார் விஜய்.

இவரது மெர்சல் படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.5.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

இதை ஹாரிசான் ஸ்டூடியோ என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கு முன் வேறு எந்த தமிழ் படங்களும் (அதாவது ரஜினி படம் தவிர) இந்த விலைக்கு போனதில்லையாம்.

இதுபோல் கேரளாவிலும் கபாலி படத்தை அடுத்து மெர்சல் பெரும் தொகைக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Mersal Karnataka Theatrical rights snapped by Horizon Studio

விஜய்-அஜித்தின் நண்பனாக நினைத்த என்னை தனுஷ் வளர்த்துவிட்டார் – சிவகார்த்திகேயன்

விஜய்-அஜித்தின் நண்பனாக நினைத்த என்னை தனுஷ் வளர்த்துவிட்டார் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and dhanushசினிமாவை தாண்டியும் படு பிஸியாக நடிகராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

பல படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார். பல படங்களின் பர்ஸ்ட் லுக் முதல் டிரைலர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது…

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோ ஆவேன் என்ற எண்ணம் இல்லை.

விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் நண்பனாக சின்ன சின்ன வேடங்களில் கிடைத்தால் போதும் என்றே நினைத்தேன்.

சின்ன சின்ன ரோல்களை எதிர்பார்த்த எனக்கு எனக்கு தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர்தான் வாய்ப்புகள் வழங்கி வளர்த்து விட்டார்கள்.

ஆனால் இன்று யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போல வளர்ந்துவிடுவார்கள் என்று மற்றவர்கள் பேசுவதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” என்று பேசினார்.

More Articles
Follows