இனிமே குழந்தைகள் என்னை பார்த்தா பயப்படுவாங்க… சுசீந்திரன்

இனிமே குழந்தைகள் என்னை பார்த்தா பயப்படுவாங்க… சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director suseenthiranதமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்து வருபவர்களில் முக்கியமான இயக்குனர் சுசீந்திரன்.

இவர் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது…

குழந்தைகளுடன் நடித்த அனுபவம் அருமையாக இருந்தது. குழந்தை அக்‌ஷித்தா நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் செய்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பெண் கிடைத்த சந்தோஷத்தில் சல்மான்கான்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பெண் கிடைத்த சந்தோஷத்தில் சல்மான்கான்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actor Salman Khan got new girl Aaysharmaபிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் தன் 50 வயதை கடந்தார்.

ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையில் நடிகைகள் ஐஸ்வர்யாராய் முதல் கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி வரை என பல நடிகைகளுடன் காதல் என வலம் வந்தவர் இவர்.

ஆனால் யாரையும் இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தன் ட்விட்டரில் எனக்கு பெண் கிடைத்துவிட்டது என இந்தியில் டுவிட் செய்திருந்தார்.

இந்த செய்தியால் இவரது ரசிகர்களில் சிலர் அதிர்ச்சியையும் சிலர் இன்பஅதிர்ச்சி பெற்றனர்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண் தன் அடுத்த படத்தின் நாயகி என பதிவிட்டு அவரின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, ஆயுஷ் சர்மா நடிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் 2019 இல் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Salman Khan‏Verified account @BeingSalmanKhan
Mujhe ladki mil gayi

Salman Khan‏Verified account @BeingSalmanKhan
Nothing to worry na @aaysharma ki film #Loveratri ke liye ladki mil gayi Warina, Toh dont worry na be happy na

Bollywood Actor Salman Khan got new girl Aaysharma

மார்ச் 1ஆம் தேதி முதல் படங்கள் ரிலீஸாகாது; விஷால் அதிரடி

மார்ச் 1ஆம் தேதி முதல் படங்கள் ரிலீஸாகாது; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil movies will not be released from 1st March 2018 says Vishalவருகிற மார்ச் 1ஆம் முதல் எந்த படங்களும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அறிவித்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு….

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விகுறியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே !!

இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படதினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
– தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

producer council strike march 1

ஜிப்ஸி படத்திற்காக ஜீவாவை இயக்கும் ராஜுமுருகன்

ஜிப்ஸி படத்திற்காக ஜீவாவை இயக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva next with Raju Murugan‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன்.

இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜீவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

விரைவில் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrenceகடந்த 2017 ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் யோகேஸ்வரன்.

சேலத்தை சேர்ந்த ராஜா, புஷ்பா தம்பதிகளின் மகனான யோகேஷ்வரனின் பெயரில் உள்ள யோகம் அவரது வாழ்க்கையில் இல்லை.

போராட்டத்தில் வீரமான அந்த இளைஞன் ரயில் விபத்தில் அடிபட்டு இறந்து விட துடி துடித்து போனார்கள் பெற்றோர்கள்.

தங்களது கனவெல்லாம் தளர்ந்து விட்ட சோகத்தில் இருந்த யோகேஷ்வரனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன லாரன்ஸ், நான் உங்க மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்..

சொன்னதோடு நின்று விடாமல் யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது அவர்களின் குடும்பத்தினருக்காக ஒரு இடத்தை வாங்கி அதில் அழகாக இருபத்தந்து லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டி கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்ஸின் சேவை தொடர அவரை நாம் வாழ்த்துவோம்…

எடப்பாடி அரசுக்கும் தினகரனுக்கும் விஷால் வைக்கும் கோரிக்கை

எடப்பாடி அரசுக்கும் தினகரனுக்கும் விஷால் வைக்கும் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal request to Chief Minister of TN and MLA of RK Nagar2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார்.

அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன.

இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை.
எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் உயர்திரு. தினகரன் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன். என விஷால் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows