தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பாளிகளில் ஒருவர் செல்வராகவன்.
இவர் தனுஷின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனுது கடந்த காலத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில் “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.
அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என பதிவிட்டுள்ளார்.
Director Selvaraghavan talks about his family poor condition