‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்

‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adangaamai motion posterதிருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’

நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும் துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ அடங்காமை’

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன்
முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்கள்..
சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள் .அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது .அவர்களை எப்படிப் பழிவாங்குவது ?பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தயங்குகிறான்; யோசிக்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த தீர்ப்பு எதிர்பாராத வகையில் இயற்கை மூலம் கிடைக்கிறது .இப்படிப் போகிறது ‘அடங்காமை’ படத்தின் கதை.

படம் பற்றி இயக்குநர் கோபால் பேசும்போது ,

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதேநேரத்தில் அடக்கமாக இருத்தல் இப்போதைய கொரோனா காலத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும். அதனால்தான் இப்போது வீடுஅடங்காமையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று எச்சரித்து ஊரடங்கு போட்டு அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறது.

எனவே அடங்காமையை எச்சரித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு மோஷன் போஸ்டரையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் கைகள் தொடுதல் மூலம் நோய் வரும் அபாயத்தைக் கூறி

‘நிலைமை அறிவோம்;மடமை தவிர்ப்போம் ;அரசின்அறிவுரை ஏற்போம்’ என
எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த’ அடங்காமை’ படம் வேகமாக வளர்ந்துவருகிறது”என்கிறார் இயக்குநர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான பொன் .புலேந்திரன் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார். தமிழ் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர், இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறாராம் .

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார் புலேந்திரன்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமானிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,
நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.’அடங்காமை ‘ இறுதிக்கட்ட வேலைகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த ‘அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் இன்று வெளியிட்டார்.அவர் பேசும்போது,

” பொதுவான வழக்கமாகப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தின் டைட்டிலை மட்டும் மோஷன் போஸ்டர் ஆக வெளியிடுவார்கள். இதில் படத்தின் பெயருடன் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மோஷன் போஸ்டரை
உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு தான். இந்த போஸ்டரை வெளியிட்டதன் மூலம் நானும் அந்த விழிப்புணர்வுப் பணியில் பங்கு எடுத்துக் கொள்கிறேன் “என்று கூறிப் படக்குழுவினரை வாழ்த்தினார்.

Director SAC released Adangaamai motion poster

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் படத்தில் சகோதரி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..?

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் படத்தில் சகோதரி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pushpa 2சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் ‘புஷ்பா’.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது.

புஷ்பா ராஜ் – படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர பெயர் – அறிமுகம் என்று ஒரு டீஸரை சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தில் அல்லு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முக்கிய வேடம் என்பதால் திறமையான நடிகையை தேடி வந்தனர். எனவே தான் இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Aishwarya Rajesh to play Allu Arjun’s sister in Pushpa

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அப்பானி சரத்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அப்பானி சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகர் சரத்குமார். (தமிழ் நடிகர் அல்ல)

லிஜோ ஜோஸ் இயக்கி மலையாளத்தில் ரிலீசான ‘அங்கமாலி டயரிஸ்’ படத்தில் அப்பானி என்ற வேடத்தில் நடித்தார் சரத்.

அதன் பிறகு இவரை அப்பானி சரத் என்றே ரசிகர்கள் அழைத்தனர்.

தமிழில் சண்டக்கோழி 2, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்திருந்தார்.

மேலும் ‘ஆட்டோ சங்கர்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார் அப்பானி சரத்.

இந்த நிலையில் ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் அப்பானி சரத் நடிக்கவுள்ளார்.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

இதில் சசிகுமாருக்கு வில்லனாக அப்பானி சரத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Appani Sarath to play antogonist in Sasi kumar’s next

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியில்லை – தமிழக அரசு

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியில்லை – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 days work tamil naduமஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு (100 நாள் வேலைத் திட்டம்) திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

அதில்…

“55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களை 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது.

மேலும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் பணியமர்த்தக் கூடாது.

பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

வேலையாட்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பரிமாறிக் கொள்ளக்கூடாது.

45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்”

என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது தமிழக அரசு.

இந்த சுற்றறிக்கை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Restrictions in Mahathma Gandhi rural development work in Tamil Nadu

‘ரெட்டைச் சுழி’ & ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கிய தாமிரா மரணம்

‘ரெட்டைச் சுழி’ & ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கிய தாமிரா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thamiraஇயக்குனர் சிகரம் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் இயக்குனர் பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்த படம் ‘ரெட்டைச் சுழி’.

இந்த படத்தை இயக்கியவர் தாமிரா.

அதன் பின்னர் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடித்த ‘ஆண் தேவதை’ படத்தையும் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் இயக்குனர் தாமிரா (53 வயது).

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தாமிரா.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Aan devathai director Thamira died due to Corona

தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kumbaariராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி’.

யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது …

இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான்.

காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.

Abi Saravanan next film is titled Kumbaari

More Articles
Follows