தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘அன்புசெல்வன்’.
இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கௌதம் மேன்ன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டார்.
ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை எனக்கே இது ஷாக் நியூஸ் என தெரிவித்தார் கவுதம் மேனன். இதனால் தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித். இந்த பரபரப்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.
இதன்பின்னர் படக்குழு கௌதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டனர்.
வினா என்ற படத்தின் பெயர் தற்போது அன்பு செல்வன் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அன்பு செல்வன் குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஜெய் கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
2018ம் ஆண்டில் சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன்.
ஆனால் அதன்பின்னர் எந்த பணிகளும் நடக்கவில்லை.
தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன்.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படத்தின் தலைப்பு, இயக்குனரை மாற்றி அன்புசெல்வன் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாராளித்துள்ளார் கௌதம் மேனன்.
Director Gautham Menon complains Anbu Selvan team