அநாகரீகமாக பேசும் எச்.ராஜாவே..; வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா!

அநாகரீகமாக பேசும் எச்.ராஜாவே..; வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathi Rajaகவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாளைப் பற்றித் தவறாக குறிப்பிட்டதாக சில தினங்களுக்கு பிரச்சினை எழுந்தது என்பதை பார்த்தோம்.

வைரமுத்து பாஜ கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார்.

இதற்கு வைரமுத்து மன்னிப்பு தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் அவர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் போராடி வருகின்றனர்.

மேலும் சில இடங்களில் வைரமுத்துவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனத் தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து.

மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம், இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும் முழங்கி, அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை, எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?

எச்.ராஜாவே… நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை, இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டாய்.

வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையில் இருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா?

எச்.ராஜாவே… திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள். கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை, அநாகரீகமாக பேசும் ராஜாவே… இப்படிப் பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே.

எளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை, எப்படி உன்னால் பேச முடிகிறது? வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள்.

அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து, எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும்? உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப் போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது.

கவனமாகப் பேசுங்கள் ராஜாவே… உன்னைப் போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போன்ற சில நல்ல அடையாளங்கள்தான் இருக்கின்றன.

எங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான். கால மாற்றமும், விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து மாற்றி வைத்தது. கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.

உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது, தமிழ் உணர்வுகளை சிதைத்தது. நீ தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை… மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே…

இப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு, உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

பெண் வேடமிட்டு பிப்ரவரியில் பொட்டு வைக்கும் பரத்

பெண் வேடமிட்டு பிப்ரவரியில் பொட்டு வைக்கும் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath in Pottuபெண் போல வேஷமிட்டு பரத் நடித்துள்ள படம் பொட்டு.

இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தம்பி ராமைய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வசனங்களை செந்தில் எழுத, இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாடல்களை விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் எழுத அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படமாக உருவாகியுள்ளதாம்.

தமிழிலும் தெலுங்கிலும் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர்.

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன் 3வது படத்தையும் கன்பார்ம் செய்த கார்த்திக் நரேன்

தன் 3வது படத்தையும் கன்பார்ம் செய்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Karthik Narenதுருவங்கள் பதினாறு படத்தின் முலம் பேசப்பட்ட கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது 3வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில்,

‘‘எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!’ என்று பதிவிட்டுள்ளார்.

பொங்கல் ரேஸில் தூள் கிளப்ப ஸ்கெட்ச் போடும் விக்ரம்

பொங்கல் ரேஸில் தூள் கிளப்ப ஸ்கெட்ச் போடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams Sketchஇந்த பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் விளம்பரம், வியாபாரம், அதிக அரங்குகள் என அனைத்திலும் முதலிடத்தில் உள்ளது கலைப்புலி தாணு வெளியிடும் விக்ரமின் ஸ்கெட்ச்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

ஸ்ரீப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளை வெளியாகும் ஸ்கெட்ச் படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்துக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஸ்கெட்ச் படம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் சமூகத்துக்கு ஜனவரி 14-ம் தேதி பொங்கல்

அந்த கொண்டாட்டத்தை இரு தினங்கள் முன்பாகவே தொடங்கி வைக்க நாளை வருகிறார் சீயான் விக்ரம்.

என்ன வேணாலும் நடக்கலாம்; அன்பாகவே இருக்க சூர்யா அறிவுரை!

என்ன வேணாலும் நடக்கலாம்; அன்பாகவே இருக்க சூர்யா அறிவுரை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya speech at Thaana Serndha Kootam pre release eventசூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நாளை வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இதன் PRE RELEASE EVENT நடைபெற்றது.

இந்த விளம்பர நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார்.

VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன்.

பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார்.

VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அனிருத்திடம் கேட்டார்.

அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். VJ அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா ?? என்று நகைசுவையாக பதில் அளித்தார்.

அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார். அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் ? என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.

நடிகர் சூர்யா நிகச்சியில் பேசியதாவது…

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும்.

அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.

இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது.

இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது.

நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்” என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.

Suriya speech at Thaana Serndha Kootam pre release event

tsk pre relese

ஹிச்சி படத்தை ஹிட்டாக்க ராணிமுகர்ஜியின் சூப்பர் புரோமோ

ஹிச்சி படத்தை ஹிட்டாக்க ராணிமுகர்ஜியின் சூப்பர் புரோமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rani Mukerji promo plans to make hit of her movie Hichkiபாலிவுட் நடிகை “ராணி முகர்ஜி” ஹிச்சி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.

இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.

“ராணி முகர்ஜி ” மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.

ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும்.

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் “நைனா மாதுர் “எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2008 ம் ஆண்டுவெளியான “ஹிக்கி பிராட் கோஹன்னின்” புகழ்பெற்ற “ஹால்மார்க்” தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். ராணி முகர்ஜி “ஹிச்சி “படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பர படுத்தவுள்ளார்.

ராணி முகர்ஜி தனது தாய்மை மற்றும் தொழில்ரீதியான கடமைகளை சமமான முறையில் 100 % செயல்படுத்த விரும்புகிறார்.

அவள் இரண்டு மாதங்களுக்கு படத்தை விளம்பரபடுத்திய பிறகு அவரது தாய்மைக் கடமைகளை செயல்படுத்த முழுமையாகத் திட்டமிட்டுள்ளார். ராணி தனது படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த விரும்புகிறார்.

ராணி மீண்டும் நடிப்பதற்கு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் காரணமாக அமையும் என நம்புகிறார். ராணி பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளிம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள்வுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்து இத்திரைப்படம்

ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

Rani Mukerji promo plans to make hit of her movie Hichki

More Articles
Follows