வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் ஜெய் – அருண்ராஜா காமராஜ்

வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் ஜெய் – அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நெஞ்சுக்கு நீதி’ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டது. நெஞ்சுக்கு நீதி பட இயக்குனர் தனது அடுத்த படத்திற்காக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்துள்ளார்.

ஜெய், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய ஹாட்ஸ்டார் ஒரிஜினல் தொடரை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார். இதற்கு ‘லேபிள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Director Arun Raja Kamaraj’s next with Actor jai

JUST IN நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் காலமானார்

JUST IN நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவர் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம். இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அஜித்தின் தந்தை சுப்ரமணியம்.

எனவே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார்.

சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Ajith Kumar’s father P Subramaniam passes away at 84

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங் டார்கெட் & க்ளைமாக்ஸ் அப்டேட் இதோ..

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங் டார்கெட் & க்ளைமாக்ஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும், படக்குழு விரைவில் சென்னை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

அதன்பிறகு ஒரு இடைவேளைக்குப் பிறகு சென்னையில் ஒரு ஷெட்யூலை நடத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை ஷெட்யூலைத் தொடர்ந்து, ‘லியோ’ படக்குழு அடுத்ததாக ஹைதராபாத் சென்று ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளது.

மேலும், ‘லியோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay’s ‘Leo’ climax sequence is to be shot at Hyderabad

மாஸ்கோ திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’.; சிலிர்க்கும் சீனு ராமசாமி

மாஸ்கோ திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’.; சிலிர்க்கும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படம் கடந்த ஆண்டு ஜூன் 2022 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் சிறந்த விமர்சனங்களுடன் தொடங்கி உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றது.

சமீபத்திய தகவலின்படி, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

ஏப்ரல் 20 முதல் 27 வரை நடைபெறவுள்ள 45வது மாஸ்கோ திரைப்பட விழாவிற்கு ‘மாமனிதன்’ அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு திரைப்பட விழாக்குழுவினர் முறைப்படி கடிதம் ஒன்றை அனுப்பி இயக்குநரின் படத்தை உறுதி செய்துள்ளனர்.

மாமனிதன்

‘Maamanithan’ to be screened at the Moscow Film Festival

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் விஜய்.; ஆஹாங்.. இது தெரியாம போச்சே.!?

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் விஜய்.; ஆஹாங்.. இது தெரியாம போச்சே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ப்ரோமோஷனை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

‘பொன்னியின் செல்வன் 2′ ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது, ​​’பொன்னியின் செல்வன் 2’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் 2011 இல் படத்தை எடுக்க முடிவு செய்த போது தளபதி விஜய் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்க ஆரம்ப தேர்வாக இருந்தார்.

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு படம் கிக்ஸ்டார்ட் ஆனபோது விஜய் அந்த வாய்ப்பை இழந்தார்.

எனவே தற்போது ​​’பொன்னியின் செல்வன் 2′ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், விஜய் தற்போது காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lyca have planned to invite Vijay for ps2 audio launch

‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் போல ‘காசேதான் கடவுளா’ படமிருக்கும் – கண்ணன்

‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் போல ‘காசேதான் கடவுளா’ படமிருக்கும் – கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது.. அப்போது படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசியதாவது…

“போன மாதம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியானது. இந்த மாதம் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! குறிப்பாக மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி! மிர்ச்சி சிவா இந்த படத்தின் ஹீரோ. அவர் இல்லாமல் இந்த படம் இல்லை. அவரால்தான் இந்த படம் தொடங்கப்பட்டது.

நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பம்மல் கே சம்மந்தம்’ படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன்நின்ற அனைவருக்கும் நன்றி”. என்றார்.

எடிட்டர் சூர்யா பேசியதாவது…

“இது எனக்கு முதல் படம். இயக்குநர் கண்ணன் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். எளிதாக பழகக்கூடியவர். ‘காசேதான் கடவுளடா’ போன்ற கல்ட் கிளாஸிக் படத்தை எடுக்கும்போது ஒரு தெளிவு தேவை. அது இயக்குநர் கண்ணனிடம் இருக்கிறது. படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் தான் இருப்பார்கள். படம் நகைச்சுவையாக நன்றாக வந்திருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

படத்தை வெளியிடும் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது…

“ஒரு படம் வெளியாவதற்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி வெளியிடுவதற்கு இயக்குநர் கண்ணன் என்னிடம் இந்த படத்தைக் கொடுத்தார். நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுக்க வெளியிட்டு கொடுத்தேன். அது வெற்றி படமாக அமைந்தது.

ஆர் ஜே பாலாஜியின் ‘எல்கேஜி’ திரைப்படத்தைப் பார்த்து அது வெற்றியடையும் என்று வாழ்த்தி அந்த படத்தை விட இரண்டு மடங்கு பிசினஸ் செய்து கொடுத்தேன்.

சினிமாவை நேசித்து இயங்கக்கூடிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு சினிமா நல்லதையே திருப்பி கொடுக்கும். அதனால்தான் கண்ணன் சாரிடம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று வாங்கினேன்.

‘வணக்கம் சென்னை’ படத்தில் எப்படி பிரியா ஆனந்துக்கும் மிர்ச்சி சிவா சாருக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததோ அது போலவே இந்த படம் முழுக்க ஒரு ஃபீல் குட்டாக இருக்கும். படம் வெற்றியடைய வாழ்த்துகள்”. என்றார்.

காசேதான் கடவுளடா

director kannan speech at Kasethan Kadavulada Press Meet

More Articles
Follows