தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2022 ஜனவரியில் தன் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவானதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன்பிறகு தனுஷ் தன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யாவும் தன் அப்பா ரஜினியுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் இயக்கும் முஷாஃபிர் என்ற பாடல் வீடியோ பணியில் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அவரின் ருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் இன்ஸ்டாவில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில்… அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் தன் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் நாய்களுடன் ரியூனியன் என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dhanush social media post creates controversy