தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களின் மகன் என உரிமை கோரி வருவதும், அது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருவதும் தாங்கள் அறிந்ததே.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளத்தை (10ஆம் வகுப்பு சான்றிதழ் படி) சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரு தனியறையில், 2 அரசு மருத்துவர்கள் தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதனை செய்தனர்.
இந்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மெடிக்கல் ரிப்போர்ட்டால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Dhanush medical report says his birth marks surgically altered