தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அவரின் நண்பராக நடித்தவர் சேதுராமன்.
இவர் தோல் மருத்துவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஒரு டாக்டருக்கே 36 வயதில் மாரடைப்பால் மரணமா? என ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தன் ஸ்கின் கேர் கிளினிக்கின் புது கிளையை துவங்க பூஜை போட்டு இருந்தாராம்.
அந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சேதுராமன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேது மரணத்தால் ஈசிஆர் கிளை துவங்கப்படுமா? என்பது சந்தேகமாக இருந்தது.
இந்த நிலையில் கணவன் சேது விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 29ல் சேதுராமனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த கிளினிக்கை நடிகர் சந்தானம் துவங்கி வைத்துள்ளார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த சேதுராமனின் கட் அவுட்டுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார் சந்தானம்…. ரியல் நண்பேன்டா…
Actor Santhanam opens late actor Sethuraman new clinic at Ecr