தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏழு வருடங்களுக்கு முன்… 2015ல் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக லீக்கான ‘பீப் சாங்’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் பெண்களை மிகவும் கேவலமாக ஆபாசமாகவும் சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகள் இருந்தன.
இதனையடுத்து மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி சிம்பு அனிருத் மீது வழக்குகள் தொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து தனக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிம்பு.
இந்த மனு நேற்று பிப்ரவரி 16ல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் சிலம்பரசனுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமில்லை என (கோவை) வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Court’s final decision on Simbu’s ‘Beep Song’ controversy