தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தல தளபதி ரசிகர்கள் மோதிக் கொள்ளும் விசிறி திரைப்பட விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துக் கொண்டார்.
இந்த விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த விழாவில் எஸ்ஏசி பேசும்போது… ‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ போல விமர்சித்து பேசியிருந்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஓர் இந்து அமைப்பின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.