மீண்டும் புரட்சி… ‘நான் கடவுள் இல்லை’..; சமுத்திரக்கனிக்காக குறும்படத்தை பெரிய படமாக மாற்றிய எஸ்ஏசி

மீண்டும் புரட்சி… ‘நான் கடவுள் இல்லை’..; சமுத்திரக்கனிக்காக குறும்படத்தை பெரிய படமாக மாற்றிய எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Samuthirakaniநீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” .

இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.

ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.

மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.

“நான் கடவுள் இல்லை” படத்தை பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் கூறியதாவது:…

“குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய
ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தை பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார்.

இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார்.

சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக்கொடுத்தார்” என்றார்.

மேலும் இத்திரைப்படம் சமுத்திரகனி அவர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் கூறினார். மேலும் அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கரையும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.

இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

SAC and Samuthirakani joins for Naan Kadavul Illai

சுஷாந்த் சிங் பிறந்த நாளில் டெல்லியில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் வைக்க அனுமதி

சுஷாந்த் சிங் பிறந்த நாளில் டெல்லியில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் வைக்க அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputபல ஹிந்தி படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

கடந்த 2020 ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் மும்பையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34.

இவரது மரணம் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது வரை இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர் சூட்டப்படவுள்ளது.

அந்த பகுதி காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத், இதற்கான முன்மொழிவை கொண்டுவந்தார்.

இந்த முன்மொழிவினை உள்ளாட்சி அமைப்பின் சாலை பெயரிடுதல், மறுபெயரிடுதல் குழுவுக்கு அனுப்பி வைத்தது டெல்லி மாகராட்சி.

அந்த பகுதியில் ஆண்ட்ரூஸ் கஞ்ச் முதல் இந்திரா கேம்ப் வரை உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மார்க் என பெயர் வைக்க மக்கள் வலியுறுத்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சுஷாந்த் பெயரை வைக்கும் இந்த முன்மொழிவுக்கு அவரது 35ஆவது பிறந்தநாளான நேற்று மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சுஷாந்த் பெயரில் சாலை என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Delhi street to be named after Actor Sushant Singh Rajput

3 படம் சூட்டிங்… 3 படம் ரிலீஸ்..; வேற ‘மாரி’ வேகம் காட்டும் தனுஷ்

3 படம் சூட்டிங்… 3 படம் ரிலீஸ்..; வேற ‘மாரி’ வேகம் காட்டும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DhanushD43 என்ற தற்காலிக படத்தலைப்பில் நடித்து வருகிறார் தனுஷ்.

விரைவில் இப்பட தலைப்பு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்ததை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

சத்யஜோதி தயாரித்து வரும் இந்த படத்தை கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார்.

கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் இருவரும் நடிக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்க தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற புதிய படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.

இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்த படங்கள் ஒரு புறம் தயாராக மறுபுறம் தனுஷின் 3 படங்கள் ரிலீசுக்கு ரெடியாகவுள்ளன.

அதன் விவரம் வருமாறு…

பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இதில் தனுஷுடன் ஐஸ்வர்ய லட்சுமி & சஞ்சனா நடராஜன் நடிக்க்ஒய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்து இருக்கிறார்.

‘கர்ணன்’ படத்தை மாரிசெல்வராஜ் டைரக்டு செய்ய, எஸ்.தாணு தயாரித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடித்துள்ளார்.

‘அந்த்ரங்கிரே’ (ஹிந்தி) படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்து இருக்கிறார்.

இவர் தனுஷின் முதல் ஹிந்திப்படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush’s next movie updates

பூசாரி வேலைக்கு ஆகாது.. எனவே கடவுளிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்

பூசாரி வேலைக்கு ஆகாது.. எனவே கடவுளிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimaiவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைப்பெற்று வருகிறது.

இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் தல. நாயகியாக ஹூமா குரேஷி நடிக்க காமெடியனாக யோகிபாபுவும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

அதர்வா நடித்த 100 பட வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இப்பட இசையமைப்பாளர் யுவன்.

இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறாராம்.

இந்த தகவல்கள் படிப்படியாக கிடைத்தாலும் முறையான அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் தரவில்லை.

எனவே ஒருமுறை தமிழக முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று கடவுள் முருகனிடம் அப்டேட் கேட்டுள்ளனர்.

வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை டிசைன் செய்துள்ளனர்.

அதில், முருகனின் படமும், அஜித்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் ‘வலிமை-க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

Ajith Fans request Valimai update to God

ரஞ்சித் & யோகிபாபு இணையும் ‘பொம்மை நாயகி’

ரஞ்சித் & யோகிபாபு இணையும் ‘பொம்மை நாயகி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bommai Nayagiஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித்.

இதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்.

கூடவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தன் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ பேனரில் தயாரித்தும் வந்தார் ரஞ்சித்.

‘காலா’ படத்திற்கு அடுத்ததாக பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனிடையில் தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார்

இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

தலைப்பு அருகே “ரோசமான ஆங்கில குத்துச்சண்டை” என்ற வாசகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்கும் “பொம்மை நாயகி” என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஞ்சித்.

இதில் காமெடி நாயகன் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

இன்று முதல் இதன் சூட்டிங்கை தொடங்கி இந்த பட பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

Pa Ranjith and Yogi Babu joins for Bommai Nayagi

நீட் தேர்வு அரசியலை தோலுரிக்கும் ‘இபிகோ 306’..; உண்மை சம்பவத்தை படமாக்கிய ரியல் டாக்டர்

நீட் தேர்வு அரசியலை தோலுரிக்கும் ‘இபிகோ 306’..; உண்மை சம்பவத்தை படமாக்கிய ரியல் டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EP KO 306நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம்.

இப்படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தை சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின்

சிவக்குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 22ல் வெளியாகிறது.

படத்தில் தாரா பழனிவேல், சீனு மோகன் மற்றும் டாக்டர் சாய் நடித்துள்ளனர். படத்திற்கு சூரிய பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு செல்லப்பா. எடிட்டிங் ஸ்ரீ ராஜா. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீ, பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணா பாடல்களைப் பாடியுள்ளனர்.

இத்திரைப்படம் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் ஜனவரி 22ல் ரிலீஸாகிறது.

படத்தின் கதை இதுதான். திருச்சி மாவடத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் கோடீஸ்வரி 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறார்.

மருத்துவக் கனவுடன் நீட் தேர்வை எதிர்கொள்கிறார். 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார். ஊடக உதவியையும் நாடுகிறார்.

இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி எப்படி மொத்த பிரச்சினையையும் அரசியலாக்குகிறார்? நீட் எப்படி ஒரு செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறுகிறது? கோடீஸ்வரிக்கு நியாயம் கிடைக்கிறதா? என்பது தான் கதை.

இப்படத்தின் இயக்குநர் சாய் அடிப்படையில் ஒரு மருத்துவர். இக்கதையை அவர் மருத்துவம் படிக்கும் காலத்திலேயே எழுதி படத்தையும் இயக்கினார்.

மருத்துவக் கல்லூரியில் சேரும் ஜூனியர்கள் சொன்ன உண்மைப் போராட்டக் கதைகளின் அடிப்படையில் படத்திற்கு உணர்வைச் சேர்த்துள்ளார்.

2014ல் சாய் தனது குறும்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சில காலம் மருத்துவராகப் பணியாற்றிய சாய் தனது கனவுத் தொழிலாளான சினிமாவுக்குத் திரும்பியுள்ளார்.

இபிகோ 306 மூலம் இயக்குநராக கால்பதித்திருக்கிறார்.

இப்படத்தை கடந்த 25 ஆண்டுகளாக கல்வியாளராக இருக்கும் சிவக்குமார் தயாரித்திருக்கிறார்.

படத்தில் கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் தாரா பழனிவேல் நடித்துள்ளார். இவரது நடிப்பை சென்சார் வாரியமே பாராட்டியதாகத் தெரிகிறது.

இயக்குநர் டாக்டர் சாய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்த்ல் நடித்திருக்கிறார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தைப் படக்குழு ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. வரும் 22ம் தேதி எம்எக்ஸ் பிளேயரில் இலவசமாக ஸ்ட்ரீம் ஆகிறது.

இப்படத்தில் ‘ஆரிரோ பாடவா’ என்ற உருக்கமான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக் கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் பாடியிருக்கிறார்.

இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெற்று 4 விருதுகள் பெற்றுள்ளது. கொல்கத்தா தாகூர் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் இப்படம் இடம்பெற்று டாக்டர் சாய்க்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றுத்தந்து.

ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழாவிலும் விருது வென்றுள்ளது. ஈரானிய திரைப்படத் திருவிழாவில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மேலும், இத்திரைப்படம் தமிழ்நாடு சர்வதேசத் திரைப்படத் திருவிழாவிலும் அதிகாரப்பூர்வ தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வரும் ஜனவரி 22ல் எம்எக்ஸ் ப்ளேயரில் இலவசமாக ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.

EP Ko 306 – A film based on Neet exam releases today

More Articles
Follows