தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளிக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பதிவு தான்
சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.
அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.
இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.
அந்த கடிதத்தில்…. தனது சிரமத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்சியில் சாதாரண உறுப்பினராக இருக்க தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது எஸ்ஏசி உள்பட கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
Another big shock for Vijay father SA Chandrasekar