தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்தன.
12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதன் தொடக்க விழாவிற்கு வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று நிறைவு நாளில் கருப்பு பேண்ட் கோட் சூட் அணிந்து வந்திருந்தார்.
அவர் விழா அரங்கில் நுழைந்தபோது
‘ஆளப்போறான் தமிழன்..’ பாடல் பின்னணியில் ஒலித்தது. அப்போது மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தப் பாடல் ஏ ஆர் ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் குரலில் விடுதலை போராட்ட வரலாற்று காட்சி ஒளிப்பரப்பானது.
மேலும் அதனை சார்ந்த சமூக நீதி போராட்ட வரலாற்றை விளக்கும் காட்சிகளும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஒளிப்பரப்பானது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா.
Chess Olympiad closing ceremony CM Stalin mass entry Vijay song Kamal Voice Sivakarthikeyan daughter song