தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழுவதும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திமுக, அதிமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று மௌன அறவழிப்போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தி வருகிறது.
இதில் கலந்துக் கொள்வதற்காக ரஜினிகாந்த் புறப்படவிருந்தார். அப்போது செய்தியாளர்களை தனது போயஸ் இல்ல தோட்டத்தில் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது….
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும். உடனே அமைக்க வேண்டும் என்பது பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கை.
ஒருவேளை அமைக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் என தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலத்தை வீணாக்குகிறது மத்திய அரசு
தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம்.
சாதாரண ஏழை விவசாயிகளை முன்னிறுத்தி, போராட்டம் நடத்த வேண்டும்.
ஐம்பூதங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனாலும், உலகம் அழிந்துவிடும்.
ஸ்டெர்லைட் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகளால் எவ்வளவு மக்களுக்கு வேலை கிடைத்தாலும் அது வேண்டாம்.
இயற்கையின் மாசுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அது தேவையில்லை.
அதனால் அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைத்தாலும் நிம்மதி இருக்காது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் அது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை” என்று பேசினார் ரஜினிகாந்த்.






