மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்திற்கு சர்ட்டிபிகேட் தர மறுக்கும் சென்சார்

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்திற்கு சர்ட்டிபிகேட் தர மறுக்கும் சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marainthirunthu paarkum marmam enna movie stills (3)எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.

இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சென்சார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது,

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும்.

ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை.

ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.

இன்ன இன்னதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொன்று இங்கு இல்லையே.

எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா? எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னாப் பின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளி வருகிறது.

இப்போது என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?

ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது.

படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.

படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.

Censor refuse to give certificate for Marainthirunthu Paarkum Marmam Enna

marainthirunthu paarkum marmam enna movie stills

காதலின் தீபம் ஒன்று பட டீசரை வெளியிட்ட இயக்குனர் VZ துரை

காதலின் தீபம் ஒன்று பட டீசரை வெளியிட்ட இயக்குனர் VZ துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director VZ Durai launched Kadhalin Dheepam Ondru Teaserகடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’.

அந்த படத்தை இயக்கிய ஜி.கே என்பவரின் அடுத்த குறும்படமே ‘காதலின் தீபம் ஒன்று ‘.

இயக்குனர் ஜி.கே அதர்வா,ஸ்ரீ திவ்யா, நரேன் நடிக்கும் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பொதுவாகவே காதலில் தோற்ற இளைஞன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புரிவது போலவும் இதனை நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது போலவும் கதைக்களம் அமைப்பது வழக்கம். ஆனால் யதார்த்தம் அப்படி மட்டும் இருப்பதில்லை என சொல்லும் படமே இந்த ‘காதலின் தீபம் ஒன்று.

இதில் இந்தியாவை சேர்ந்த ஜப்பான் தொழிலதிபர் சுரேஷ் நல்லுசாமி என்பவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.

கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கு இது முதல் படம் என்றாலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டுகிறார் இயக்குனர் ஜி.கே.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, ஜனனி ரத்தினம் & தீபா நடராஜன்
இசை : ஆண்டன் ஜெப்ரின்
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: நாச்சியம்மை விஜய்
படத்தொகுப்பு: ராகுல்
இயக்கம் : ஜி.கே

இந்த படத்தின் டீசரை இயக்குனர் VZ துரை அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டினார்.

Director VZ Durai launched Kadhalin Dheepam Ondru Teaser

Kadhalin Dheepam Ondru Team

 

80 லட்சத்தை விளம்பரமின்றி விவசாயிகளுக்கு கொடுத்த தனுஷ்

80 லட்சத்தை விளம்பரமின்றி விவசாயிகளுக்கு கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to themஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பார்கள். ஆனால் தற்போது நம் நாட்டில் அந்த முதுகெலும்பே வளைந்துள்ளது எனலாம்.

அதிலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசம்.

கடந்த 4 மாதங்களாக இவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி வினோதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தினம் ஒரு விவசாயி தற்கொலை என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.

ஒரு சில பிரபலங்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சியால் பலியான 125 குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்துள்ளார் தனுஷ்.

இதற்காக கிட்டதட்ட ரூ. 80லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவு செய்ய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் நண்பரும் இயக்குனமான சுப்ரமணிய சிவா மற்றும் தனுஷ் ரசிகர்கள் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த தொகையை யார் மூலமாகவும் கொடுக்காமல், முதல் கட்டமாக 125 குடும்பங்களை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த உதவியை விளம்பரப்படுத்த வேண்டாம் எனவும் தனுஷ் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to them

dhanush helped farmers

 

ஒரே வாரத்தில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

ஒரே வாரத்தில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவருடத்திற்கு ஆறு படம் கொடுத்து திரையுலகினரையே ஆச்சரியப்பட செய்பவர் விஜய்சேதுபதி.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஓரிரு மாதங்களில் மாதத்திற்கே இரண்டு படங்களை கொடுத்திருந்தார்.

அதே டிரெண்ட்டை இப்போதும் செய்யவிருக்கிறார் விஜய்சேதுபதி.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள புரியாத புதிர் படத்த செப்டம்பர் 1ம் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள கருப்பன் படத்தை செப்டம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த இரு படங்களின் ரிலீசும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 96, அநீதிக்கதை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

தன் அடுத்த பட கலைஞர்களை அறிவித்தார் சிம்பு

தன் அடுத்த பட கலைஞர்களை அறிவித்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsஓரிரு தினங்களுக்கு முன்பு சிம்பு தன் அடுத்த படம் பற்றி தெரிவித்தார் சிம்பு.

இப்படத்தில் பாடல் இல்லை; இடைவேளை இல்லை; என பதிவிட்டுருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டிராக பணிபுரிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்றவர் சந்தோஷ்சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மேல் நம்பிக்கை வைத்து அவர் இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என சிம்பு பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்பார் என நம்பலாம்.

STR aka Simbu announced his next movie technicians

STR‏Verified account @iam_str
Proud & happy to announce @santoshsivan the visionary will be the cinematographer. Thank u sir for believing in me and my vision #Blessed

A @santoshsivan visuals , @thisisysr musical , Antony cuts for A #SilambarasanTRFilm God bless #Excited #Humbled

ஓவியா பெயரில் சினிமா; பிக்பாஸ் போட்டியாளர்களும் நடிக்கிறார்கள்

ஓவியா பெயரில் சினிமா; பிக்பாஸ் போட்டியாளர்களும் நடிக்கிறார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviyaஒரே நிகழ்ச்சி… ஓஹோன்னு புகழ்…

இது மற்றவர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ தெரியவில்லை.

ஆனால் நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்தளவுக்கு புகழ் கிடைத்துள்ளது.

நிகழ்ச்சி முடித்துவிட்டு வரும்போது அவரே ஆச்சயரிப்படும் அளவுக்கு புகழின் உச்சம் அடைந்திருப்பார்.

எனவே அவரை வைத்து படங்களை இயக்க இயக்குனர்கள் கதையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஓவியாவை விட்டா யாரு? என்ற பெயரில் ராஜதுரை என்பவர் ஒரு படம் இயக்கவிருக்கிறாராம்.

மதுரை செல்வம் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள கஞ்சா கருப்பு, வையாபுரி உள்ளிட்டவர்களும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

More Articles
Follows