தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி பிரச்சனையில் நீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார்.
இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல் கூறியதாவது,
“நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம்.
இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது.
(ரஜினிகாந்த் நடித்துள்ள) காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது இப்போது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்” என்றார்.
அப்போது குமாரசாமி கூறியதாவது:-
“இருமாநில விவசாயிகளையும் பாதிக்காதவாறு தமிழக அரசுடன் பேச்சு நடத்தி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
Cauvery water issue more important than Kaala release in Karnataka says Kamal