தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் பிரபலமானவர் சினேகன்.
இவர் அமீர் உடன் ‘யோகி’ படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது.
அதன் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
அங்கு அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டார்.
இருபத்தி இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் இருந்தார் சினேகன்.
இந்த நிலையில் இவர் மீது ஒரு விபத்து வழக்கில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (28).
அந்த நபர் ஓட்டி வந்த பைக் மீது பாடலாசிரியர் சினேகன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அருண் பாண்டியன் காயமடைந்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Case filed against lyricist snehan