பூணூல் அணியமாட்டேன் என பெற்றோரிடமே மறுத்தவன் நான்..- கமல்

பூணூல் அணியமாட்டேன் என பெற்றோரிடமே மறுத்தவன் நான்..- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan speech about his caste at Nammavar Padai Audio launchமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.

பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன்…

“நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும்.

வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் பேனர்கள் வைப்பது மக்களுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே அவற்றை உடனடியாக எடுக்கவும் சொல்லி இருக்கிறேன்.

பின்னர் தான் அவையாவும் முறையாக அனுமதி வாங்கி சட்டத்தின் படி வைக்கப்பட்ட பேனர்கள் எனத் தெரிய வந்தது.

இருந்தாலும், ஒட்டுகின்ற போஸ்டர்கள் மூலமாக எங்களை உங்களுக்கு தெரியக்கூடாது, எங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உங்களுக்கு நாங்கள் தெரியவேண்டும் என விரும்புகிறேன்.

ஒற்றை நூலைக்கூட (பூணூல்) எனது பெற்றோர்களிடம் வேண்டாம் என்று சொன்னவன், ஆனால் இங்கு வந்த காந்தியவாதி கருப்பையா அணிவித்த கற்றை நூலை பெருமையுடன் அணிந்து கொள்கிறேன்.

காரணம், இந்த கதர் நூல் தான் வெள்ளையனை பொட்டலம் கட்டி அனுப்பியது. தனித்தனியாக கிடந்த இந்தியாவை தைக்க உதவிய நூல் அது.” என்று பேசினார்.

Kamalhassan speech about his caste at Nammavar Padai Audio launch

nammavar padai

ரஜினி கதையில்தான் விக்ரம் நடிக்கிறார்..; கவுதம்மேன்ன் சீக்ரெட்ஸ்

ரஜினி கதையில்தான் விக்ரம் நடிக்கிறார்..; கவுதம்மேன்ன் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and vikramகௌதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

ஆனால் இக்கதையை முதலில் ரஜினியிடம் தான் சொன்னாராம். அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினி சாரிடம் சொன்னேன். தாணு சார்தான் கூட்டிட்டுப்போனார். காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பரா இருக்கு. யாரெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எவ்வளவு நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. இச்செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோஷமாக என்னை அனுப்பிவைத்தார் தாணு.

மாலையில் தாணு சார் போனில், ‘இல்லடா… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லிட்டாங்க.

இப்போது நடக்காது. நான் இரஞ்சித்தை வச்சுப் பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

இது கபாலி படத்திற்கு முன் நடந்த செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் அடுத்த ஆரவ்-ஓவியா ஜோடி இவர்கள்தான்.?

பிக்பாஸ் வீட்டில் அடுத்த ஆரவ்-ஓவியா ஜோடி இவர்கள்தான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Which pair will be next Arav Oviya in Bigg Boss Season 2கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் – ஓவியா காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் காட்டிக் கொண்ட ஆரவ், பின்னர் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, தற்கொலைக்கு முயல, அது பெரும் பிரச்சினையாகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போதும் கூட தான் ஆரவ்வை காதலிப்பதாக கூறியே சென்றார்.

தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் மற்றொரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸின் மகன் ஷாரிக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கும் காதல் உருவாகும் எனத் தெரிகிறது.

டாஸ்க் ஒன்றில் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என ஷாரிக்கிடம் கேட்க, அவர் ஐஸ்வர்யா தத்தாவைக் கை காட்டினார்.

எனவே ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து பிக்பாஸ் வீட்டில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் எபிசோட்டில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Which pair will be next Arav Oviya in Bigg Boss Season 2

bigg boss 2 love pair

பிக்பாஸ் வீட்டில் விஸ்வரூபம்-2 சிங்கிளை வெளியிடும் கமல்

பிக்பாஸ் வீட்டில் விஸ்வரூபம்-2 சிங்கிளை வெளியிடும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal going to launch single track of Viswaroopam 2 in Bigg Boss houseகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

இதன் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது.

முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

இந்த ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையைமத்துள்ளார்.

Kamal going to launch single track of Viswaroopam 2 in Bigg Boss house

அங்கீகாரத்தை தருமா ஆர்.கே.நகர்.? காத்திருக்கும் இசை சுனாமி பிரேம்ஜி

அங்கீகாரத்தை தருமா ஆர்.கே.நகர்.? காத்திருக்கும் இசை சுனாமி பிரேம்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Nagar movie and Isai Tsunami Premji music newsஇசை சுனாமி என்று பெயரிட்டுக் கொண்டு நடிகர் பிரேம்ஜி அவர்கள் சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தில் ‘பப்பர மிட்டாய்’ என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க,பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது.

இந்த பாடல் கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ரயில் பயணங்களில் குழுவாக இணைந்து பாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆம்,அது சம்பிரதாயமான கானா பாடல், அந்த ட்ரெண்ட் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.

வடகறி இயக்குனரான சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அஞ்சனா கீர்த்தி, சந்தனா பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

“பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன். இன்றைய ட்ரெண்டில் இருப்பது அவரின் பலம்.

அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக, பிரேம்ஜி மிகவும் தீவிரமான இசையமைப்பாளர். பின்னணி இசை கோர்ப்பில் பிரேம்ஜி மிகச்சிறந்தவர்.

அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர் கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் சரவண ராஜன்.

பிரேம்ஜி அமரன் தவிர்த்து, ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி படத்தை தயாரிக்கிறார்.

RK Nagar movie and Isai Tsunami Premji music news

ரஜினியின் அறிமுக பாடலுக்கு மீண்டும் எஸ்பி. பாலசுப்ரமணியம் வாய்ஸ்

ரஜினியின் அறிமுக பாடலுக்கு மீண்டும் எஸ்பி. பாலசுப்ரமணியம் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh musicரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள்.

அதில் முக்கியமாக அவரது அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.

வந்தேண்டா பால்காரன் (அண்ணாமலை), நான் ஆட்டோக்காரன் (பாட்ஷா), ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து), என் பேரு படையப்பா (படையப்பா), தேவுடா தேவுடா (சந்திரமுகி), புதிய மனிதா (எந்திரன்) உள்ளிட்ட பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாடல்களை பெரும்பாலும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடியிருப்பார்.

ஆனால் அண்மைக்காலமாக அறிமுகப்பாடல் இல்லாமல் போய்விட்டது.

ரஜினி படத்தை வித்தியாசமாக செய்கிறோம் என்கிற பெயரில் அவரை இயக்கிய ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் அறிமுகப்பாடல் இல்லாமலும் முக்கியமாக எந்த பாடலுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் இல்லாமலும் செய்துவிட்டார்கள்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் கொடுக்கவுள்ளார்.

இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh music

More Articles
Follows