தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
7 வருடங்களுக்கு முன்பு ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது” என பேசியிருந்தார் நடிகர் அமீர்கான். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே ஒவ்வொரு முறையும் ஆமீர்கானின் படங்கள் ரிலீசாகும்போது BOYCOTT (MOVIE NAME) என்ற வாசகங்கள் டிரெண்ட் ஆகும்.
தற்போது நாளை அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘லால் சிங் சத்தா’ படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
அதன்படி சமூக வலைதளங்களில் boycott laal singh chaddha) ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இது குறித்து அமீர்கான் விளக்கம் அளித்து இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த பட ப்ரமோஷனில்…
”நான் யாரையாவது, காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன்.
இந்தப் படத்தில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும்’.்
நான் தூங்கி 2 நாட்கள் ஆகிவிட்டது. நான் காமெடிக்காக சொல்லவில்லை.
என்னால் தூங்க முடியல.. நான் லால் சிங் சத்தா படத்தை பற்றியே சிந்திக்கிறேன்.
ஆகஸ்ட் 11-க்கு பிறகுதான் என்னால் தூங்க முடியும் என நினைக்கிறேன” என்றார்.
Bollywood Super Star Aamir Khan issues apology ahead of ‘Laal Singh Chaddha’ release