தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை சனம் ஷெட்டியும் பிக்பாஸ் தர்ஷனும் காதலித்தனர்.
பின்னர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் சனம் புகார் கொடுக்க அது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இருவரும் பின்னர் பிரிந்தனர்.
இந்த நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷனம் தன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.
இவர் பிக்பாஸில் இருந்த போதும் சேலை கட்டும் தருணங்களில் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.
இதனால் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பினர்.
ஒரு ரசிகர் இதை ஷனம் ஷெட்டியிடம் கேட்டார்.
அதற்கு அவர் பதிலளிக்கையில்…
ஆஹா.. இதே கேள்வியைத்தான் நிறைய பேர் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..,
உங்கள் ஆசியுடன் விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன்.
எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பானது.
திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகரோ… அவங்க (ஷனம்) கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
Bigg Boss sanam shetty married or not ?