பிரபலங்கள் பாராட்டிய பாரம்

பிரபலங்கள் பாராட்டிய பாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baaram press meetதானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனம் பெயரில் SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய

SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது…

எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும். நன்றி

தயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசியதாவது…

நான் ஒரு மும்பை பெண். இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய இருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கமலகண்ணன் பேசியது…

இந்த மேடையில் இயக்குநர் ப்ரியா சந்திக்கின்ற சூழ்நிலை எனக்கு ஏற்கனவே பழக்கமான ஒன்று. சுதந்திர பாணி படங்கள் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவது எத்தனை பிரச்சனை என்பது எனக்கு தெரியும். இப்போது இந்தப்படம் பெரிய அளவில் ரிலீஸாவதில் மகிழ்ச்சி. படம் பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் மனதிற்குள் படத்தின் அழுத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனதை பாரமாக்கும் கதையை தத்ரூபமாக சொல்லியுள்ளார்கள் இப்படம் தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆதித்யா பேசியதாவது…

“பாரம்” படம் பார்த்தேன் மிகுந்த பாரமாக இருந்தது. கிராமங்களில் சுமை தாங்கி கல் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் கல். அது போல் வீட்டில் சுமை தாங்கியாக சிலர் இருப்பார்கள். ஆனால் நாம் மறந்து விடுகிறோம். அதை இந்தப்படம் ஞாபகப்படுத்தியது. இந்தப்படம் ஆழமான பாதிப்பையும், நல்லதை கற்றுக்கொடுக்கும் படைப்பாகவும் இருக்கும் அனவரும் பார்க்க வேண்டிய படைப்பு இது.

இயக்குநர் அருண் கார்த்திக் பேசியது…

இயக்குநர் பிரியாவை முன்னதாகவே தெரியும். மும்பையில் இருந்து வந்து இம்மாதிரி படைப்பை எடுத்ததற்கு அவருக்கு நன்றி. முதல் படைப்பை உங்கள் ரத்தத்திலிருந்து உருவாக்குங்கள் என்று ஃப்ரெஞ்ச் இயக்குநர் கூறுகிறார். ஆனால் அப்படி உருவாக்கினால் படத்தை வெளியிடுவதில் தமிழ் சினிமாவில் நிறைய பாரம் இருக்கிறது. இந்தப்படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும் என ஆசைப்படுகிறேன் அது நடக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் அஜயன் பாலா பேசியது…

வயதானவர்கள் படும் துன்பத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதன் உச்சத்தை சொல்கிறது இந்தப்படம். நம் கலாச்சாரத்தின் ஒரு அவலத்தை பேசியிருக்கிறது இந்தப்படம். இந்தப்படம் தேசியவிருது பெற்ற போது படம் பற்றி தெரியாமல் நானே விமர்சனம் செய்தேன் அதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறேன். இப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் வெற்றிமாறனால் இன்று அது நடக்கிறது அதற்கு அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தவர்கள் ரியலிசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். கண்ணில் பார்க்கும் வாழ்க்கையை திரையில் காட்டியிருக்கிறது பாரம். இப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. எதார்த்தம் அவ்வளவு இயல்பாக இழையோடுகிறது. நம் அனைவரையும் பாதிக்கும் வகையில் இருக்கிறது “பாரம்”. இந்தப்படத்தை கொண்டாடுங்கள் நன்றி.

இயக்குநர் ராம் பேசியதாவது…

தேசிய விருது வாங்கினால் மட்டும் நல்ல படம் என சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது. “பாரம்” நல்ல படம். கோவாவில் இயக்குநரை சந்தித்தபோது இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வாருங்கள் என்றேன். எப்படி கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ் நாட்டுக்கு வாருங்கள் என்றேன் வந்தார். திரை விழாக்காளில் எப்படி படம் பார்க்கிறார்களோ அதே போல் தான் தமிழகத்து திரையரங்குகளிலும் படம் பார்ப்பார்கள். இங்கு படத்தை கொண்டாடுவார்கள். பாரம் படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன் அவர் ரிலீஸ் செய்கிறார் நன்றி. இப்படம் நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப்போயாவது இந்தப்படத்தை பாருங்கள் நன்றி

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

இயக்குநர் ராம் மூலம் தான் இந்தப்படத்தை பற்றி அறிந்தேன். ராம் பார்த்துவிட்டாரல்லவா அது போதும் நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். எனது பெயர் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. SP Cinemas தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமிழில் எல்லாவகையான படங்களும் ஆதரிப்பார்கள். ஆனால் இங்கு மற்ற மொழிகளில் மாதிரி சுதந்திர பாணி படங்களுக்கு பெரிய அளவில் வணிக ரீதியிலான வெளியீடு கிடைப்பதில்லை. மீடியா ஆதரித்தால் மட்டுமே அப்படிபட்ட படங்கள் ஜெயிக்கிறது. நிறைய சமரசங்களுடன் தான் இந்தப்படத்தை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வணிக ரீதியான வெற்றி இதற்கு பிறகு வரும் இது போன்ற படங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்தபடத்தின் இயக்குநர், அம்மா, மகள் இருவருமே போராளிகள். இப்படிபட்ட ஒரு படத்தை எடுக்க தீர்மானித்து, எடுத்து தேசிய விருதுக்கு அனுப்பி, போராடி இப்போது திரைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பயணம். நான் இந்தப்படத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தப்படத்தை வெளியிட இயக்குநர் ராம் தான் அதிக சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். உங்களை மாற்றும். தயவு செய்து இந்தப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

இசை – வேத் நாயர்

தயாரிப்பு – Reckless Roses

தாயாரிப்பாளர் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி , ஆர்த்ரா ஸ்வரூப்.

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyanதிருமணங்கள் நடந்தேறும் காலங்கள் அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும். எல்லை தாண்டி சந்தோஷ கூச்சல்கள் கேட்கும். திருமண சங்கீதங்கள் எங்கும் ஒலிக்கும். குடும்பத்தில் எல்லோரும் இணையும் திருமணம் அத்தனை மகிழ்ச்சியானதாய் இருக்கும். நாம் இங்கு பேசுவது திருமணத்தை பற்றி அல்ல. திருமணத்தை மையமாக வைத்து காதலை கொண்டாடிய “பெல்லி சூப்புலு” தெலுங்கு படத்தின் தமிழ்பதிப்பை பற்றி. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கை போடு போட்ட “பெல்லி சூப்புலு” திரைப்படம் நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் உருவாகிவருகிறது. தமிழில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றாக முடிக்கப்பட்டு, தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா படம் பற்றி கூறியதாவது…
தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. 2020 பிப்ரவரி 7 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் வெகு நிறைவான படைப்பாக படம் உருவாகி வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார். பின்வரும் காலங்களில் அவர் தயாரிப்பாளர்களின் செல்வமாக விளங்குவார். மிகப்பெரும் வெற்றியடைந்து, எல்லைகள் தாண்டி பேசப்பட்ட ஒரு படத்தை, ரீமேக் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் கலாச்சாரத்துடன் தமிழ் மொழியின் தன்மை மாறமல், வாழ்வியல் தன்மைகள் வெளிப்பபடும்படி திரைக்கதை அமைக்க பெரும் திறமை வேண்டும். அதில் அவர் வித்தகராக இருக்கிறார். இப்படம் கதாப்பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மையமாக கொண்ட படம். அசல் பதிப்பின் ஆத்மா எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் ஹரிஷ் கல்யாணும், ப்ரியா பவானி சங்கரும் தங்கள் கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக உயிர்ப்பித்துள்ளார்கள். எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகள் பெரிய உற்சாகத்தை தந்தது. படத்தை முழுதாக பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்றார்.

A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொரேனா சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். 2020 கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mysskins controversial speech at Baaram Press Meet அண்மையில் பாரம் என்ற தமிழ் படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை பெண் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டர்களும் கலந்துக் கொண்டு படத்தை பாராட்டினர்.

இதில் மிஷ்கினின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துவிட்டது. சில நேரங்களில் கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார் மனிதர்.

மிஷ்கின் பேசியதாவது…

எந்த நடிகனும் ஒரு கேரக்டராகவே வாழ முடியாது. கற்பழித்தால் அது போலவே வாழ முடியுமா?

கேரக்டராகவே வாழ்ந்தார் என்று என் படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன்.

நான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொன்னால். டேய் அது எல்லாம் ஒரு தடவ தான் பார்க்க முடியும்.

ஆனால் ஒருவன் படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றார்.

அவனுக்கு வேலையில்லை போல. அந்த படத்தில் ஒரு மயிரும் இல்ல..

பாரம் படம் பார்த்த அன்று நான் மது அருந்த வில்லை.

மது அருந்தி இருந்தால் பாரம் பட இயக்குனர் ப்ரியா வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்திருப்பேன். ஸ்ரீதேவி என்னடீ படம் எடுத்து இருக்க.?

நிஜமாக சொல்றேன். எனக்கு ராமுக்கு வெற்றி மாறனுக்கு எல்லாம் படமே எடுக்க தெரியல. என்னடா படம் எடுக்குறீங்கன்னு எங்களையே நீங்க திட்டலாம்.

நம் சின்ன வயதில் நம் மலத்தை அம்மா அள்ளி கழுவி விட்டுப்பார்கள். ஆனால் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் நாம் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்.

பாரம் படத்தை பார்த்தா கண்டிப்பாக உடனே நாம் எல்லாரும் அம்மா அப்பாவ பார்க்க போவோம். நான் என் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பினாலும் நன்றாக பார்த்துக் கொண்டாலும் அவர்கள் என்னுடன் இல்லையே என்பதை இந்த பாரம் படம் சொல்லுகிறது.

இந்த படத்திற்கு போஸ்டர் கூட அடிக்கவில்லை என்று சொன்னார் பிரியா. நான் என் செலவில் போஸ்டர் அடித்து நானே சுவர்களில் ஒட்டுகிறேன்.

என்று மிஷ்கின் பேசினார்.

Director Mysskins controversial speech at Baaram Press Meet

BREAKING போயி வேற வேலை இருந்தா பாருங்கடா; விஜய்சேதுபதி டென்ஷன் ஏன்.?

BREAKING போயி வேற வேலை இருந்தா பாருங்கடா; விஜய்சேதுபதி டென்ஷன் ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathiவிஜய் வீடு, பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.

விஜய்க்கு எதிராக பல வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

அதுபோல விஜய் சேதுபதியும் மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட கருத்துக்களையெல்லாம் பதிவிட்டனர்.

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

இதனால் டென்ஷன் ஆனார் விஜய் சேதுபதி.

எனவே ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்று விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

https://twitter.com/VijaySethuOffl/status/1227496726451257347

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Arjunaசந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார்.

சந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு எல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ashwath Marimuthuஇளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது….

“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி வாழ்வில் நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.

டிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது கதையின் சுவாரஸ்யத்தை உடைத்து விடாதா என வினவியபோது …

படகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.

படக்குழு பற்றி பேசும்போது …

அசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

More Articles
Follows