காவிரி நீர் வேணுமின்னா ஐபிஎல் பாக்காதீங்க; ஜேம்ஸ் வசந்தன் ஐடியா

காவிரி நீர் வேணுமின்னா ஐபிஎல் பாக்காதீங்க; ஜேம்ஸ் வசந்தன் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avoid IPL CSK match to get Cauvery water says James Vasanthanசுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற கண்களால் இரண்டால் என்ற பாட்டை யாராலும் மறக்க முடியாது.

இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன்.

இவர் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு ஐடியா ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நம் விவசாயத்திற்காக நம் உணவிற்காக நாம் இதை நிச்சயலாம். அப்படி நீங்கள் நினைத்தால் இதை மேற்கொண்டு படியுங்கள்.

அவர் பதிவிட்டுள்ளதாவது….

‘காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.

2018 April 10-ம் தேதி CSK-வின் முதல் மேட்ச் 50,000 கொள்ளளவு கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அன்று ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.

இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம்

ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது.

நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண சிந்திக்க வேண்டும்.

இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான்

ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை.

அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!. இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை!

போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!

அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள்.

ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.

ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Avoid IPL CSK match to get Cauvery water says James Vasanthan

Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassanஇன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதற்கு முன் தற்போது சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.

அதிமுக அரசு ஒரு போலியான உண்ணாவிரதத்தை நேற்று மேற்கொண்டது. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்த்து வருகிறது.

இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று பேசினார் கமல்ஹாசன்.

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassan

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாரிசாக நடிகர் விஜய்.?

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாரிசாக நடிகர் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay connected with Traffic Ramasamy life historyதனி ஒருவன் நினைத்தால் எதையும் தைரியமாக எதிர்த்து போராடலாம் என வாழ்ந்து காட்டி வருபவர் 80 வயது இளைஞர் டிராபிக் ராமசாமி.

அண்மையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கலங்கடித்தவர் இவர்.

பெரும் அரசியல் போராட்டங்கள் நிறைந்த இவரின் வாழ்க்கையை டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றனர்.

விக்கி என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார்.

இவருடன் விஜய்சேதுபதி, ரோஹினி, சீமான், பிரகாஷ் ராஜ், குஷ்பு, விஜய் ஆண்டனி, எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா செய்தியாளர்களிடம் பேசும்போது…

இந்த படத்தின் க்ளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தன் அரசியல் வாரிசாக விஜய்யை கை காட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியல் விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்திக்கொள்வதாக் குற்றம்சாட்டினார்.

ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை நிஜ டிராபிக் ராமசாமியும் படக்குழுவினரும் மறுத்துள்ளனர்.

Actor Vijay connected with Traffic Ramasamy life history

சில்க் படத்தில் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி பாய் கேரக்டரில் நட்ராஜ்

சில்க் படத்தில் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி பாய் கேரக்டரில் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natty as Online shopping delivery boy in Silk movieஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர்.

தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார்.

சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார்.

வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா.

இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள்.

ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, “படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது.

இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார்.

படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடாத இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ், நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

Natty as Online shopping delivery boy in Silk movie

directors hari and harish

கர்நாடாகாவில் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு; காலா ரிலீஸ் ஆகுமா..?

கர்நாடாகாவில் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு; காலா ரிலீஸ் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajinikanthஇந்த மார்ச் 2018ல் ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த திரையுலகினரும் ஆதரவு கொடுத்துள்ளதால் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய காலா திரைப்படம் அறிவித்தப்படி ஏப்ரல் 27ல் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுபட்டு நடப்போம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாளு நாகராஜ் என்பவர் தலைமையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் காலா படத்தை கர்நாடாகவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.

இதனால் காவிரி பிரச்சினையால் காலா ரீலீஸ் மேலும் சிக்கல்கள் உருவாகும் எனத் தெரிகிறது.

இதுவரை உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அறம் 2 படத்திற்காக ஜாதி-மத கொடுமைகளை பேசும் நயன்தாரா

அறம் 2 படத்திற்காக ஜாதி-மத கொடுமைகளை பேசும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopi Nayinar gearing up to make Aramm sequelகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட்டான படம் ‘அறம்’.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை.

இந்த கதையும் இதன் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தார் கோபி நயினார்.

இதன் படப்பிடிப்பு வருகிற 2018 செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இதில் மத ரீதியிலான வன்முறைகள், சாதிய கொடுமைகளை எதிர்த்து நயன்தாரா போராடுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

நயன்தாரா தற்போது பிஸியாகவுள்ளதால் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Gopi Nayinar gearing up to make Aramm sequel

More Articles
Follows