தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மற்றும் ஊர்வசி… இவர்கள் தமிழ் சினிமாவை தன் நடிப்பால் கவர்ந்தவர்கள்.
இவர்கள் நால்வரும் இணையும் படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.
இதன் முழு படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவில் படமாக்கி விட்டு தற்போது இந்தியா திரும்பியிருக்கிறது படக்குழு.
இதுநாள் வரை தலைப்பிடாத இப்படத்திற்கு தற்போது இப்படத்துக்கு ‘ஓ! அந்த நாட்கள்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.