தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரங்களில் ஒன்று கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான்.
இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கேரளாவில் பல போராட்டங்கள் நடைபெற்றன.
இருந்தபோதிலும் 2 பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று வந்துள்ளதால் அந்த சர்ச்சை தற்போது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஐயப்பன் பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளதாம்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இதில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார் .
இப்படத்திற்கு இசையமைக்க ஏஆர். ரஹ்மானை அனுகியுள்ளதாக கூறப்படுகிறது.