விஜய்யின் துப்பாக்கி-2… ஜி.வி.பிரகாஷிடம் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ்

விஜய்யின் துப்பாக்கி-2… ஜி.வி.பிரகாஷிடம் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay murugadoss prakashஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் துப்பாக்கி.

விஜய்க்கு ஒரு ஸ்டைலீஷ் லுக்கை இப்படத்தில் முருகதாஸ் கொடுத்திருந்தார்.

இப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

எனவே முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது தீவிர விஜய் ரசிகரான ஜிவி. பிரகாஷும் வாழ்த்திவிட்டு துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முருகதாஸ்ம் சீக்கிரமே நடக்கும். ஓகே என்று தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி-ஜிவி.பிரகாஷ் பாணியில் நட்ராஜ்

விஜய்சேதுபதி-ஜிவி.பிரகாஷ் பாணியில் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natarajவருடத்திற்கு ஒரு படத்தை ஒரு ஹீரோ கொடுக்கவே திணறி வரும் நிலையில் வருடத்திற்கு அரை டஜன் படங்களை அசால்ட்டாக இரண்டு ஹீரோக்கள் கொடுத்து வருகிறார்கள்.

ஒருவர் விஜய்சேதுபதி. மற்றொருவர் ஜி.வி. பிரகாஷ்.

அண்மையில் விஜய்சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் றெக்க ஆகிய படங்களில் இரண்டு வார இடைவெளியில் வெளியானது.

அதுபோல் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் புரூஸ் லீ ஆகிய இருபடங்களும், இந்த நவம்பரில் வெளியாகவுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, நட்ராஜின் நடிப்பில் உருவாகியுள்ள எங்கிட்ட மோதாதே படம் டிசம்பர் 2ல் ரிலீஸ்.

இதனையடுத்து டிசம்பரிலேயே போங்கு என்ற படமும் வெளியாகவுள்ளதாம்.

விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை தயாரித்த, 24 ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனமே அவரின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.

மோகன் ராஜா இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க, ஓரிரு தினங்களுக்கு முன் இதன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

அடுத்த வருடம் 2017ல் ஆகஸ்ட் 25, அதாவது விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தை வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi hassanதென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவரை ட்விட்டரில் ஏராளமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ட்விட்டரில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக போலீசில் புகார் செய்தார்.

இதனால் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவர் பெங்களுரை சேர்ந்த டாக்டர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

நடிகை சபர்ணா மரணம்… கொலையா? தற்கொலையா?

நடிகை சபர்ணா மரணம்… கொலையா? தற்கொலையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sabarna-anandபிரபல டிவி நடிகையான சபர்ணா, சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென அவர் இறந்து வீட்டில் கிடந்ததாக செய்திகள் வந்தன.

இந்த மரண செய்தி டிவி நட்சத்திரங்களை அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் இருந்துள்ளதால், தற்கொலை செய்துக் கொண்டார் என ஒரு பக்கம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், சபர்ணா இயற்கையிலேயே தைரியமானவர்.

நாங்கள் சோர்வாக இருந்தால் எங்களுக்கு தைரியம் கொடுப்பவர் அவர் என அவருடன் பழகிய நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எனவே சபர்ணாவின் மரணத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.

இவருக்கு சுகுணா என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் முதன்முறையாக நடிக்கும் படம் “துப்பறிவாளன்“

இதன் சூட்டிங் இன்று சென்னையிலுள்ள கோடம்பாக்கம், புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பின் போது, புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் விஷாலை சந்தித்து, தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.

எனவே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உதவிகளை வழங்கினார் விஷால்.

எனவே, புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

More Articles
Follows