ஜூன் 16-17 தேதிகளில் லண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

ஜூன் 16-17 தேதிகளில் லண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிருத் இலண்டனில் பிரம்மாண்டாமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.

இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிரூத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது.

இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது தான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிரூத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் ஜுன் 17 ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

இங்கு இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை. அனிரூத் அவர்கள் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

‘ஒய் திஸ் கொலவெறி…’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் முன்னணி இளம் இசைகலைஞரான அனிரூத்தின் இசையுலக பயணத்தில் இந்த இசைநிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லட்சக்கணக்கானவர் இந்நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசிப்பதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த இசைநிகழ்ச்சியில் ஜெனிதா காந்தி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும், பாடகிகளும், இசை கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இதுப் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு டைரக்டருடன் கைகோர்க்கும் கார்த்தி

தெலுங்கு டைரக்டருடன் கைகோர்க்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthiநடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை போன்று தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே இவரது படங்கள் தயாராகும்போது தெலுங்கு சினிமாவை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

நடிகர் கார்த்திக்கு தோழா படத்திற்கு பிறகு தெலுங்கில் நல்ல மார்கெட் உருவாகியுள்ளது.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இதனையடுத்து “நீடி நாடி ஓகே கதா” படத்தை இயக்கிய வேணு உடுகுலா அவர்களின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கார்த்தியை சந்தித்து வேணு ஒரு கதை சொன்னாராம். அவரும் ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளது.

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரி ரீமேக்கில் நடிக்கும் ஜீவா

சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரி ரீமேக்கில் நடிக்கும் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva plays lead role in Swathanthryam Ardharathriyil Malayalam remakeகடந்த வாரம் மலையாளத்தில், ‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்’ என்கிற படம் வெளியானது.

டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டனி வர்கீஸ்தான் நாயகனாக நடித்திருந்தார்.

தன் நண்பர்களுடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை இப்படத்தின் கதையாம்.

இந்தப்படத்தை பார்த்த நடிகர் ஜீவா படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

தமிழிலும் டினு பாப்பச்சன்தான் இயக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Jiiva plays lead role in Swathanthryam Ardharathriyil Malayalam remake

காலா பொலிக்டிக்கல் ஸ்டோரிதான்; கன்பார்ம் செய்தார் கதாநாயகி

காலா பொலிக்டிக்கல் ஸ்டோரிதான்; கன்பார்ம் செய்தார் கதாநாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala will be Action based political story says Anjali Patilபொதுவாகவே ரஜினிகாந்த் படங்களுக்கு எல்லா தரப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கும்.

அதுவும் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னர் காலா திரைப்படம் வருவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

அண்மையில் காலா டீசர் வெளியாகி தமிழகத்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

இந்நிலையில் காலா படத்தில் நாயகியர்களில் ஒருவராக நடித்துள்ள அஞ்சலி பாட்டீல் தன் கேரக்டர் குறித்து கூறியுள்ளார்.

இவர் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத் தெரிந்த மராத்திப் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.

அவர் கூறியதாவது…

ரஜினி சார் ரொம்ப எளிமையான மனிதர். அவரிடம் இருந்து மனிதத் தன்மையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலாவில் என் கேரக்டர் பெயர் ‘புயல் சாருமதி கெய்க்வாட்’.

இந்த படத்தில் ரஜினி சாரின் காதலியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

எனக்கும் ஒரு முக்கியமான கேரக்டர் உள்ளது. கதையை நகர்த்திச் செல்லும். சிறப்பான பல காட்சிகளில் நான் இருப்பேன்.

காலா ஒரு அரசியல் படம்தான். அழுத்தமான அரசியல் கருத்துக்கள் படத்தில் இருக்கிறது.

படத்தின் பாதியை மகாராஷ்டிராவிலும், பாதியை தமிழ்நாட்டிலும் எடுத்திருக்கிறோம்.

படத்திலும் மராட்டியம் சம்பந்தமான பல விஷயங்கள் உண்டு. இந்த படத்தில் நான் நடிக்க அதுவும் ஒரு காரணம்.” என கூறினார் அஞ்சலி பாட்டீல்.

Kaala will be Action based political story says Anjali Patil

கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்

கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ragina gautam karthickநான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி.

இதில் நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்க, போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

அண்மையில் இதன் சூட்டிங்கை தாய்லாந்தில் முடித்துவிட்டு படக்குழு சென்னை திருமபியது.

தற்போது இப்படத்தில் இடம் பெற்ற ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து இளைஞர்களை சூடேற்றும் வகையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார்.

இப்போ சொல்லுங்க.. நாங்க வைச்ச டைட்டில் சரிதானே… கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா

Actress Regina Cassandras hot stills goes viral

mr chandramouli ragina

ஸ்டெர்லைட் போராட்ட முறையே தப்பு; நடிகர் பீச்சாங்கை கார்த்திக் பேச்சு

ஸ்டெர்லைட் போராட்ட முறையே தப்பு; நடிகர் பீச்சாங்கை கார்த்திக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ban Sterlite protest is wrong says Peechaankai fame Actor Karthikதூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீச்சாங்கை என்ற படத்தில் நடித்த கார்த்திக் என்பவர் இந்த போராட்டமே தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

மேலும் தமிழக மக்களிடம் ஒற்றுமையில்லை என்பதாலேயே இந்த போராட்டங்களில் தீர்வு இல்லை எனவும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

Ban Sterlite protest is wrong says Peechaankai fame Actor Karthik

அவரின் பேட்டி இதோ….

More Articles
Follows