தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் அஜீத்துக்கு சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல பெயர் உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் அவரது நல்ல எண்ணங்கள்தான்.
ஒருநாள் இரவு அஜீத் தனது மேனேஜருக்கு ஒரு அவசர வேலையாக போன் செய்தாராம்.
அப்போது அவரது போனை வேறு ஒருவர் எடுத்து மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என கூறினாராம்.
உடனே போனில் பேசியவரிடம் விலாசத்தை கேட்டுக் கொண்டு அந்த ஏரியா சென்றாராம்.
ஆனால் சரியான வழி தெரியவில்லை என்பதால் அங்கிருந்த டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டுள்ளார்.
அதன்பின்னர் துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய அஜித் வழி சொன்ன டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் பணத்தை கொடுத்து துக்கவீட்டில் இருக்கும் எல்லோருக்கு டீ கொடுங்கள் என்றாராம்.
இந்த சம்பவம் டீக்கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.