தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில இதை தடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே பெப்சி தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நடிகர்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தன் சார்பில் நிதிகளை வழங்கியுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி கொடுத்துள்ளார்.
ஆக ரூ. 1.25 கோடி கொடுத்துள்ளார். இவையில்லாமல் பிஆர்ஓ. யூனியனுக்கு ரூ. 2.5 லட்சமும் கொடுத்துள்ளார்.
இத்துடன் தமிழ் சினிமா பத்திரிகையாளர்களின் இரண்டு சங்கங்களுக்கும் சேர்த்து ரூ. 2.5 லட்சம் கொடுத்துள்ளார்.
Ajiths Humongous Donation For Corona Relief fund