சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து தனது பைக் பயணத்தைத் தொடங்கியவர் மரால்.

இவர் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களுக்கு அவர் தன் பைக்கிலேயே பயணப்பட்டார்.

தொடர்ந்து 1 1/2 ஆண்டுகள் பயணம் செய்து இப்பயணத்தின் மூலம் புதிய சாதனையையும் மரால் படைத்தார்.

தற்போது ஈரானியப் பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மரால் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பைக்கில் தனியாகப் பயணம் மேற்கொண்ட இரானைச் சேர்ந்த மரால் யஸார்லூவை நடிகர் அஜித் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா..

“மரால் யஸார்லூவுடன் பைக்கில் உலகம் முழுவதும் மரால் தனியாகப் பயணப்பட்டிருக்கிறார்.

7 கண்டங்கள், 54 நாடுகளுக்கு அவர் சென்று வந்திருக்கிறார். மராலின் அனுபவங்களைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் உலகம் முழுவதும் தான் மேற்கொள்ளவிருக்கும் பைக் பயணத்துக்கான யோசனைகளையும் பெற அஜித் குமார் டெல்லியில் மராலைச் சந்தித்து உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Ajith plans a motor cycle world tour

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’ சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘எஸ்-3’ (சி-3) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹரி.

‘சிங்கம் 3’ படத்தின் வெற்றியை பாராட்டி ஹரிக்கு ஒரு காஸ்ட்லி காரையும் பரிசளித்தார் சூர்யா.

இதனையடுத்து இவர்கள் கூட்டணி ‘அருவா’ படம் மூலம் 6வது முறையாக இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சூர்யா கதையில் சொன்ன மாற்றத்தாலும் அதனை ஹரி ஏற்க மறுத்து விட்டதாலும் ‘அருவா’ திடீரென டிராப் ஆனது.

அந்த சமயத்தில் தான் சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் ‘சூர்ரைப்போற்று’ படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என சூர்யா அறிவித்தார்.

“தியேட்டர்களில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்” என மறைமுக கண்டன அறிக்கை வெளியிட்டார் ஹரி.

இதனால் சூர்யா & ஹரி மோதல் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

இதன் பின்னர் ஹரி தனது மச்சான் அருண் விஜய் நடிக்க ‘யானை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வரும் 2021 கிறிஸ்மஸ் நாளில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.

எனவே தான் இயக்கிய ‘யானை’ படத்தை சூர்யா படத்துடன் மோத திட்டமிட்டு வருகிறாராம் ஹரி.

‘யானை’ படத்தின் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்..

Arun Vijay and Suriya films to clash on christmas day ?

‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

‘விக்ரம்’ அப்டேட் : 2022 பொங்கலை குறி வைக்கும் உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், நரேன், ஷிவானி முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

2022 பொங்கலுக்கு விக்ரம் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி் வருகிறதாம்.

Kamal’s Vikram is set to release for next year pongal

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

சிவகார்த்திகேயன் அழைப்புக்காக காத்திருக்கும் சந்தானம் அணி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் மாறன்.

சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் பைத்தியமாக நடித்திருந்தார்.

‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..’ என்ற வசனம் இவரை தற்போது இன்னும் பிரபலமாக்கியுள்ளது.

இந்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாறன் கூறியுள்ளதாவது…

‘நான் பல வருடங்களாக சந்தானம் டீமுடன் இருக்கிறேன்.

அதனால் சிவகார்த்திகேயன் அவருடைய படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்.

விவேக்குடன் பல படங்களில் நடித்த செல் முருகன் மற்ற நடிகர்கள் படத்தில் (விவேக் அல்லாத படங்களில்) நடிக்க மாட்டார்.

ஆனால் நான் அப்படியில்லை. என்னை சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடிக்க அழைத்தால் நடிப்பேன்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Dikkiloona fame Maaran talks about working with Sivakarthikeyan

இளையராஜாவின் 1417வது படத்தை இயக்கும் ‘சிலந்தி’ ஆதிராஜன்

இளையராஜாவின் 1417வது படத்தை இயக்கும் ‘சிலந்தி’ ஆதிராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது..

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பன் மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.

இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது.

இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் மிகப்பெரிய பாக்கியத்தை பெற்றுள்ளார் இயக்குநர் ஆதிராஜன்.

இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார்.. மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

“பியர் பிரேமா காதல்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார்.

முனிகிருஷ்ணா கலை அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா அமைக்கின்றனர்.

காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.

Ilayaraja to score music for Silandhi Aadhi Rajan’s next

‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

‘மகான்’ படத்தின் மாஸ் அப்டேட் : சூறையாட்டம் ஆட வரும் விக்ரம் & துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இதன் அடுத்த மாஸ் அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’சூறையாட்டம்’ என்ற சிங்கிள் பாடல் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahaan First Single Soorayaatam to be out on Sep 22

More Articles
Follows