அரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி

அரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor aari and ajithநடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா காலம் தொட்டே இது நடந்தேறி வருகிறது.

கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

அண்மைக் காலமாக ரஜினி, விஜய் ஆகியோர் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரக்கூடும் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள விசிறி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஆரி பேசியதாவது…

அஜித் அரசியலுக்கு வருவாரா? எனத் தெரியவில்லை. ஆனால் அவர் இப்போதே தமிழ் நாட்டின் வரைப்படத்தை வைத்து நலத் திட்டங்களை தீட்டி வருகிறார்.

தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற வேண்டும் என அவர் திட்டம் வைத்திருக்கிறார். இதை அஜித்துக்கு நெருங்கிய நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வெளியே சொல்லக்கூடாது என்றார். ஆனால் இப்போது சொல்லிவிட்டேன். என அஜித் ரகசியத்தை போட்டு உடைத்தார் நடிகர் ஆரி.

தவறான தகவலை ரசிகர்களுக்கு விஜய் தரக்கூடாது..- பாஜக பி.டி.அரசகுமார்

தவறான தகவலை ரசிகர்களுக்கு விஜய் தரக்கூடாது..- பாஜக பி.டி.அரசகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay should not give wrong information to his fans says BT Arasakumar from BJPவெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ள “விசிறி” படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் இனிதே நடைபெற்றது.

இப்படத்தில் அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, மற்றும் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பி.டி.அரசகுமார் பேசியதாவது…

“மோடி அரசும், தமிழக பாஜகவும் சினிமாவில் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன்.

தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது.

இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜய்யால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் நாங்கள் மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனங்களை எதிர்த்தோம்” என்றார்.

Vijay should not give wrong information to his fans says BT Arasakumar from BJP

தயாரிப்பாளரின் தற்கொலையால் தீரன்-ரிச்சி எடுத்த திடீர் முடிவு

தயாரிப்பாளரின் தற்கொலையால் தீரன்-ரிச்சி எடுத்த திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran richieநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழாவை ரத்து செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விழா மற்றொரு நாள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் இன்று நடைபெற விருந்த ரிச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் நாளை இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு தண்டிக்கப்பட வேண்டும்… சுசீந்திரன்

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு தண்டிக்கப்பட வேண்டும்… சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director suseenthiranதிரைப்பட இணை தயாரிப்பாளராகவும், நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அசோக் அண்ணனின் மரணம் என்னை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணமான ‘மதுரை அன்பு’ தண்டிக்கப்பட வேண்டும். மதுரை அன்பு வால் நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சசிகுமார் அண்ணனுக்கு கதிர் சாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி நபர்களை எச்சரிக்கும் விஷால்

தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி நபர்களை எச்சரிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishalகந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளதாவது…

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.

இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது.

கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
பொறுத்தது போதும்.

கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள்.

இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்.

இது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

– விஷால்
தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer GN AnbuChezhiyan background news updatesதற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குறிப்பிட்டுள்ள மதுரை அன்பு செழியன் யார்? என்பது பற்றிய ஒரு பார்வை இதோ…

பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை அன்பு செழியன்.

இன்றைய ஆட்சிப் பொறுப்பில் அதிமுகவின் ஒரு சில முக்கிய அமைச்சர்களுக்கு மிக நெருக்கமானவர். ஒன்றுபட்ட அதிமுகவில் மதுரை நகர் மாவட்டத்தில் பொறுப்பில் இருந்தவர்.

கடந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் சீட் வாங்க கடும் முயற்சி செய்தார். உளவுத் துறை குற்றப் பின்ணனி உள்ளளவர் அன்பு செழியன் என்று இவர் பற்றி கொடுத்த தகவலை ஆய்வு செய்த அன்றைய அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்பு செழியனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார் அவர்களும் அன்பு செழியனின் அரசியல் பலம் குறித்து தன் வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Producer GN AnbuChezhiyan background news updates

More Articles
Follows