சல்யூட் ஆபிசர்.; சென்னை விமான நிலையத்தில் அஜித் செய்த செயல்

சல்யூட் ஆபிசர்.; சென்னை விமான நிலையத்தில் அஜித் செய்த செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்.

இவர் தற்போது மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் வினோத்துடன் இணைந்து ஏகே 61 படத்திற்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அந்தப் படத்தின் வெளிநாட்டு சூட்டுங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை விமானத்தில் அஜித் வந்து இறங்கியதும் அவரது உதவியாளர்கள் அவரை கார் வரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அஜித்துக்கு உதவியாக சில காவலர்களும் கார் வரை வந்து உதவியுள்ளனர்.

இதனையடுத்து அந்த காவலர்களுக்கு கை கொடுத்து தன் நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.

அஜித்தை கண்டதும் சில ரசிகர்கள் செஃல்பி எடுக்கவும் முயன்றனர். மேலும் அஜித்தின் இந்த வீடியோவை இணையத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்

தன்னை ஒரு பெரிய நடிகராக நினைக்காமல் சக மனிதரை மதிக்கும் அஜித்தின் உயர்ந்த பண்பு பாராட்டு கூறியதுதான்.

Ajith Kumar respect others with love never ends

பிரபுதேவாவை ஒற்றைக்காலுடன் ஆட வைத்த சதீஷ்.; பிட்டு பட இயக்குனருடன் கூட்டணி.; ‘பொய்க்கால் குதிரை’ விழா ஹைலைட்ஸ்

பிரபுதேவாவை ஒற்றைக்காலுடன் ஆட வைத்த சதீஷ்.; பிட்டு பட இயக்குனருடன் கூட்டணி.; ‘பொய்க்கால் குதிரை’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘‘ஹர ஹர மகாதேவகி’ , ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில்…

” இயக்குநர் சந்தோஷ் இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு திரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னை சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன்.

அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும்,‘ பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடன கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ என சொல்வேன்.

அது இந்த படத்தில் நடைபெற்றிருக்கிறது. ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்…

” நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார்.

மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம்.

பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசுகையில்…

, ” இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை.

அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது.

அதே தருணத்தில் நீண்ட காலமாக திரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

கஜினிகாந்த் படத்தில் எனக்கு கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி.. நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம்.
என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜய்யை தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ எல் விஜய் மூலமாக பிரபுதேவாவை சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.

நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள்.

இந்த தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற திரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார்.

இமான் அவர்களிடம் வேறு ஒரு (மேட்டர் மாணிக்கம்) படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்த படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்த சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து. ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.

‘பொய்க்கால் குதிரை’ படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாக படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில்….

” இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், ‘ஜூன் போனால் ஜூலை..’ எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன்.

இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம்.

மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ‘சிங்கிள்..’ என்ற பாடலில் ‘கால் போனால் கல் கடுக்கும்…’என்றொரு வரி இடம்பெற்றிருந்தது. அதற்கான அர்த்தத்தை கேட்டு வியந்தேன்.

சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டி இமான் இசையமைப்பாளர் என்ற எல்லையை கடந்து, ‘மை டியர் பூதம்’ என்ற படத்தில் இரண்டு புதிய இசைக்கலைஞர்களை பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய மனிதநேயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.

சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிப்படும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார்.

இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொண்டுவந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Poikkal Kuthirai audio launch high lights

‘மாமனிதன்’ 10M சாதனை.; ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற ‘ஆஹா’ ஓடிடி

‘மாமனிதன்’ 10M சாதனை.; ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற ‘ஆஹா’ ஓடிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது.

இந்த நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும்.

இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார்.

ஆடி மாதம் என்றாலே தமிழ் மக்களுக்கு தள்ளுபடி என்றதொரு விஷ்யமும் உடன் நினைவுக்கு வரும்.

தமிழகத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தில் இணைந்து விட்ட இந்த ஆடி தள்ளுபடி திட்டத்தை, ஆஹா டிஜிட்டல் தளமும் வழங்குகிறது.

மூன்று மாத சந்தா தொகையான 149 ரூபாய்க்கு பதிலாக, ஆடி மாதத்தில் ரூ 99/- மட்டும் செலுத்தி, கட்டணச் சலுகையைப் பெறலாம். அனைத்து வகையான ஆஹா ஒரிஜினல்ஸ் மற்றும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும், வலைதளத் தொடர்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை புதிய சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’, நம் மண்ணின் வாழும் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியல் பதிவு என்பதும், இதனை இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கே உரிய பாணியில் இயக்கி, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறார் என்பதும் உண்மை.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ளது அதனை கண்டு மகிழலாம்.

மேலும் ஆஹா டிஜ்ட்டல் தளத்தில் ‘இரை’, ஆகாஷ்வாணி’, ‘அம்முச்சி 2’,‘குத்துக்கு பத்து’,‘ஆன்யா‘ஸ் டுடோரியல்’ஆகிய வலைத்தளத் தொடர்களுடன், விரைவில் ‘ஈமோஜி’ எனும் புதிய வலைத்தளத் தொடரும் வெளியாகிறது.

‘பயணிகள் கவனிக்கவும்’, ‘போத்தனூர் தபால் நிலையம்’ போன்ற ஆஹா ஒரிஜினல்ஸ் படைப்புகளும், சபாபதி, செல்ஃபி, ரைட்டர், மன்மத லீலை, ‘ஐங்கரன்’, ‘கூகுள் குட்டப்பா’, ‘கதிர்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களும் ஆஹாவில் வெளியாகியிருக்கிறது.

Maamanithan team provides free education to poor students

தமிழகத்தில் அதிகபட்ச வரி செலுத்திய நடிகர் ரஜினிக்கு ஆளுநர் தமிழிசை விருது

தமிழகத்தில் அதிகபட்ச வரி செலுத்திய நடிகர் ரஜினிக்கு ஆளுநர் தமிழிசை விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவரது நடிப்பில் 168 வது படமாக ‘ஜெயிலர்’ என்ற படம் உருவாகி உள்ளது.

நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

ஆகஸ்ட் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

ஜெயிலர் படத்திற்காக ரூ.130 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார்.

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

வருமான வரி தினமான இன்று, வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது.

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு பதிலாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக் கொண்டார்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.

அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என ஆளுநர் தமிழிசை விழாவில் பேசினார்.

1990களிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்ச வரி செலுத்தும் நடிகர் நான்தான் என்று ஒரு முறை பேட்டி அளித்து இருந்தார் ரஜினிகாந்த். அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த வீடியோவை பதிவிட்டு அன்றும் இன்றும் ரஜினிகாந்த் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

soundarya rajinikanth

Rajinikanth awarded as highest tax payer of Tamilnadu

தேசிய விருதுக்கு முன்பே தமிழில் பாடகி நஞ்சம்மாவுக்கு வாய்ப்பளித்த ‘சீன் நம்பர் 62’

தேசிய விருதுக்கு முன்பே தமிழில் பாடகி நஞ்சம்மாவுக்கு வாய்ப்பளித்த ‘சீன் நம்பர் 62’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ப்ருத்திவிராஜ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘ஐயப்பனும் கோஷியும்’.

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய பலத்த போட்டி எழுந்தது என்பது நாம் அறிந்து ஒன்றுதான்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடிய பாடகி ‘நஞ்சம்மா’ என்பவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அய்யப்பனும் கோஷியும் என்ற படத்திற்காக ‘தெய்வ மகளே’ என்ற பாடலை பாட படக்குழுவினர் நஞ்சம்மாவை அணுகியுள்ளனர்.

அப்போது தான்.. “ஆடு மேய்க்கும்போது பாடும் ‘களக்காத்த சந்தனம்’ பாடலை படக்குழுவிற்கு பாடிக் காட்டியுள்ளார்.

அப்பாடலை கேட்ட பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த பாடலே பிடித்துள்ளது. எனவே படத்திலும் அந்த பாடல் இடம்பெற்றது.

தற்போது… தான் ஆடு மேய்க்கும் போது பாடிய பாடல்தான் (‘களக்காத்த சந்தனம்’) சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை நஞ்சம்மாவுக்கு பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமா உலகில் பிரபலமாகி வரும் நஞ்சமா தற்போது முதல் முறையாக தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

கதிரவன் நாயகனாக நடிக்கும் ‘சீன் நம்பர் 62’ என்ற படத்தில் ஒரு அருமையான பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் சில மாதங்களுக்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

ஆடம் சமர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி கே வி இசையமைத்து வருகிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்ய ஈஸ்வரமூர்த்தி எடிட்டிங் செய்து வருகிறார்.

இந்தப் படத்தை நிகில் ராமச்சந்திரன் மற்றும் வேணு ராம் ஆகிய இருவரும் தயாரித்து வருகின்றனர்.

இந்த படம் விரைவில் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளது.

Nanjamma gets movie chance before she gets national award

ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

ஜெய் – அதுல்யா இணைந்த ‘எண்ணித்துணிக’ இசை விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது..

“ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“

ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது..

“இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்படி உருவாவதற்கு காரணம். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.“

இசையமைப்பாளர் சாம் சி எஸ் கூறியதாவது..

இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.

ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.

நடிகை அதுல்யா கூறியதாவது..,

“இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெய் கூறியதாவது..

“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி

இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது..

“தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம்.

எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி“

நடிகர் மாரிமுத்து கூறியதாவது..

“இந்த படத்தில் நான் ஜெய் உடைய அப்பாவாக நடித்திருக்கிறேன். இந்த படம் ஒரு பாசிடிவ் அதிர்வலையை தரும். ஒளிப்பதிவாளர் தினேஷ் இந்த படத்திற்காக கடினமான அர்பணிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம். “

பாடலசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது..

“ பெரிய போராட்டங்களை கடந்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சாம் சி எஸ்- க்கு எனது நன்றிகள். தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. “

ஜாக்குவார் தங்கம் கூறியதாவது..

“ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் ஜெய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நிச்சயமாக இந்த படம் மிகபெரிய வெற்றிப்படமாக அமையும். ஜெய்யும் நாயகியயும் உண்மையிலேயே காதலித்து வாழ்ந்துள்ளார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் கூறியதாவது..

“உள்ளடக்கம் சிறப்பாக உள்ள படங்களை உலகம் முழுவதும் ரசிப்பார்கள். இந்த படத்திற்காக எவ்வளவு போராடினார்கள் என எனக்கு தெரியும். படத்தில் ஜெய் பிரமாதமாக நடித்துள்ளார். இது ஒரு நேர்த்தியான திரைப்படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். “

மிர்ச்சி சிவா கூறியதாவது…

இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் வசந்த் கூறியதாவது…

“நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச்சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர்.

முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் கூறியதாவது..

இயக்குனர் வெற்றியை பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியை கூறிகொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசியதாவது…

இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சாம் CS இசையமைத்துள்ளார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Jai Athulya starrer Yenni thuniga audio launch highlights

More Articles
Follows