அஜித்தால் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற தக்‌ஷா குழு

அஜித்தால் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற தக்‌ஷா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith in daksha teamபல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் அவரது பெயரிலும் ஒரு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு வழங்கப்படும்.

8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் அந்த ‘அப்துல் கலாம்’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.

72-வது சுதந்திர தினத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு இந்த ஆண்டு அப்துல் கலாம் விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு.

விருது பெறும் இந்த தக்‌ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக உள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ’மெடிக்கல் எக்ஸ் பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அஜித் ஆலோசகராக செயல்படும் குழு முழுவீச்சில் செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-வினோத் இணையும் படம் அமிதாப்பச்சன் படத்தின் ரீமேக்..?

அஜித்-வினோத் இணையும் படம் அமிதாப்பச்சன் படத்தின் ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vinothவிஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படமானது அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த பிங்க்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இப்படத்தின் தமிழ் உரிமையைத்தான் போனிகபூர் கைப்பற்றி இருக்கிறாராம்.

குடியரசுத் தலைவர் முதல் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் பிங்க படத்தை முன்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சினிமா விஸ்வரூபத்தை கேட்டால் அரசியல் விஸ்வரூபத்தை சொன்ன கமல்

சினிமா விஸ்வரூபத்தை கேட்டால் அரசியல் விஸ்வரூபத்தை சொன்ன கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan clarifies about Viswaroopam 3 sequelதமிழ் சினிமாவின் விஸ்வரூபத்தை இந்தியாவுக்கு காட்டிய கலைஞர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன்.

இவர் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் அண்மையில் வெளியானது.

ஆனால் முதல் பாகம் அடைந்த வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

விஸ்வரூபம் படத்தின் 1 மற்றும் 2 பாகங்கள் வந்துவிட்டது. எனவே விஸ்வரூபம் 3 வருமா? என கேட்கப்பட்டது.

அதற்கு கமல், சினிமாவில் இல்லை, நிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க போகிறேன் என தெரிவித்தார்.

அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகி விட்ட கமல் விரைவில் அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுக்க உள்ளதை தான் இப்படி சொல்லியிருக்கிறாரோ..?

Kamalhassan clarifies about Viswaroopam 3 sequel

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் *காலா* ரஞ்சித்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் *காலா* ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Silk Smitha biopic Web Series will be produced by Ranjithசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தையும் தற்போது தயாரித்து வருகிறார்.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெப் சீரிஸ் படங்களை தயாரிக்க முன் வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற ஹிந்தி படம் வெளியானது.

இதில் சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யாபாலன், தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை வெப்சீரிஸாக தயாரிக்க உள்ளாராம் ரஞ்சித்.

இதற்கான முதற்கட்ட வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Silk Smitha biopic Web Series will be produced by Ranjith

அனந்த் நாக்-அஞ்சுகுரியனின் காதலைப் பேசும் *ஜுலை காற்றில்….*

அனந்த் நாக்-அஞ்சுகுரியனின் காதலைப் பேசும் *ஜுலை காற்றில்….*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

July Kaatril is a film on relationships with a differenceகாவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’.

இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே சி சுந்தரம்.

இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனுசரண் படத்தொகுப்பை கவனிக்க, ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். விஷ்வகிரண் நம்பி மற்றும் ஸ்ரீசெல்வி ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது…

‘இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இளமையில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் பிரிவையும் எதிர்கொள்கிறார்கள்.

புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவராசியமாக தயாராகியிருக்கிறது ‘ஜுலை காற்றில்’.

இந்த படத்தில் நேரம், பிரேமம், அமர காவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த அனந்த நாக், கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக அஞ்சுகுரியன் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.

இதன் படபிடிப்பை சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்க்சுகல் ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறோம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறோம்.’ என்றார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகை அஞ்சுகுரியன் அண்மையில் வெளியான சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பதும், மற்றொரு நடிகையான சம்யுக்தா மேனன் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கே சி சுந்தரம் மறைந்த இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் உருவான ‘உன்னாலே உன்னாலே ’ மற்றும் ‘தாம் தூம் ’ ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதல் கதைகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் சொல்வதில் வல்லவரான ஜீவாவின் உதவியாளர் என்பதால், அவரது இயக்கத்தில் தயாராகும் ‘ஜுலை காற்றில்..’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

July Kaatril is a film on relationships with a difference

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளுக்கு கமல்-விஷால்-பிரகாஷ்ராஜ் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளுக்கு கமல்-விஷால்-பிரகாஷ்ராஜ் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fundகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது.

வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

கமல் 25 லட்சமும், சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சமும், நடிகர் பிரகாஷ்ராஜ் 5 லட்சமும், நடிகை ரோகினி 2 லட்சமும் இதுவரை கொடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 5 லட்சம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார்.

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும்,மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fund

More Articles
Follows