ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

ஆஸ்பத்திரியில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. காரணம் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith shaliniஎந்தவொரு பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாதவர் தல அஜித்.

இவரை பார்க்க வேண்டுமென்றால் திரையில் தான் பார்த்தாக வேண்டும்.

தப்பி தவறி இவர் பொது இடத்தில் எங்கேயாவது தென்பட்டால் இவரை பார்க்க கூட்டம் அலை மோதும்.

அப்படிதான் அஜித்தின் நேற்றைய வீடியோ வைரலானது.

நடிகர் அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

‘எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?’ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தன் மனைவி ஷாலினியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் அப்பா உடல் நலமில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

ரூ. 2 கோடிக்கு 200 பேர் முதலீடு; சத்யராஜ் பார்த்திபன் விஜய்சேதுபதி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

பல கோடிகள் புரளும் சினிமாவை இந்த ஊரடங்கு கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள பல புதிய யுக்திகளை திரைத்துறையினர் கையாள உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, பிரமிட் நட்ராஜன் ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

கதையின் நாயகனாக சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது. சொன்ன பட்ஜெட்டில் 2 மாதங்களில் படத்தை முடித்து விட்டு ரிலீஸுக்கு பின் பிசினஸ் செய்து வரும் பணத்தில் அவரவரின் மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப தொகை பிரித்து அளிக்கப்படும்.

மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முதலில் நேரடியாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்கு பிறகே ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வுக்காக மனோ பாலாவை இயக்கிய கணேஷ் பாபு

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வுக்காக மனோ பாலாவை இயக்கிய கணேஷ் பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano bala ganesh babuநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது.

அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது. கொரானா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் மனோபாலா அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கொரானா விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியசாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன் குமாரசாமி அவர்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் என்றார் கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு

ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confusedகேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷிகாபூதின்.

இவரின் கோழி பண்ணையில் 6 கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகள் இட்டு வருகின்றன.

வழக்கமாக கோழி முட்டை என்றாலே மஞ்ச கருக்களே இருக்கும்.

எனவே இந்த சந்தேகத்தை போக்க கோழிகள் இட்ட முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்க செய்தனர். அந்த கோழிகளும் பச்சை கரு முட்டையை இட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அதிசயத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

இதனையறிந்த பேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கோழிகள் ஏதேனும் வித்தியாசமான தீவனங்களை சாப்பிட்டதால் இதுபோன்ற பச்சை மஞ்சள் கரு முட்டையிடுவதற்கு வாய்ப்பிருக்கு என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தான் எந்த ஒரு வித்தியாசமான தீவனமும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த பச்சை முட்டைக்கு பின்னணி உள்ள ரகசியத்தை கண்டறிய மூன்று வாரங்கள் தேவைப்படும் என இந்த துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கோழிகளை பல்கலைக்கழகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கோழிகள் மூன்று வாரத்திற்கு பிறகு மஞ்சள் கரு முட்டை போட்டால் பண்ணையில் வித்தியாசமான தீவனங்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படும்.

அப்படி இல்லை என்றால் மூன்று வாரங்களுக்குப் பிறகும் பச்சை கருமுட்டை போட்டால் அதற்கான சரியான காரணங்களை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confused

நடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை

நடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer KS ThangaSamyசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது.

தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி.

திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பதே.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்கு படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். சம்பளம் முடிவு செய்த பிறகு வெளிப்படையான நிதிநிலை என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. நடிகர்களுக்கு தங்கள் பங்கு கிடைத்து விடும்.

சதவீத அடிப்படை சம்பளம் என்பதால் தயாரிப்பாளர்கள் பல படங்களை எடுக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். நிறைய படங்கள் வெளிவரும். வாய்ப்புகள் அதிகம் ஆவதால் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.

ஆப்ஷன்கள் அதிகமானால் அதன் பயன் நுகர்வோருக்கு தானே! இங்கு நடிகர்களே நுகர்வோர்கள். பல படங்களில் நடிப்பதால் வருவாய் பெருகுவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. அதே நேரத்தில் பல புது தயாரிப்பாளர்களையும் ஊக்கம் பெற, பயப்படாமல் ஆர்வமுடன் வர இது வழிவகை செய்கிறது.

இது நடிகர்கள் மட்டும் இல்லாமல், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள் என ஆரம்பித்து அனைவருக்கும் வருமானம் பல்கி பெருகி அவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் பணியாற்ற அற்புதமான பணி சூழ்நிலையை அளிக்கிறது. இதன் வழியாக படைப்பின் தரமும் மேம்படும்.

யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அனைவரும் வாழ வழி செய்யும் சதவீத சம்பளம் என்பதை சிறிய, பெரிய நடிகர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பெரிய நடிகர்கள் இதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து நடித்து கொடுத்தால் அவர்கள் சினிமாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். தங்களை வளர்த்த சினிமாவிற்கும் நன்றிக்கடன் ஆற்றுகிறார்கள், ரசிகர்கள் தங்களை பல படங்களில் கண்டு மகிழ்வதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறார்கள்.

அடுத்து சிறுசிறு பங்குதாரர்கள். அடுத்தடுத்த சினிமாக்கள் வெளிவருவதற்கு மிக பெரிய தடையே முதலீடு தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் தயாரிப்பாளர் மொத்தமாக முடங்கும் அவலம் இப்போது இருக்கிறது.

சினிமாத்துறைக்கு வருவதற்கு பலரும் அஞ்ச காரணம் அது எதிர்ப்பார்க்கும் பெரிய அளவிலான முதலீடுதான். அது இவ்வாறு சிறு சிறு பங்குகளாக பிரிக்கப்படும்போது மிக பெரிய உதவியாக அமையும். நலிந்த நிலையில் இருக்கும் பல தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இது அமையும். முதலீட்டிற்கு ஏற்ப பங்கு பிரித்து அளிக்கப்படுகிறது.

நஷ்டமும் பெரிதாக அவர்களை பாதிக்காது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சியில் ஈடுபடுவார்கள். இதில் சில சிக்கல்கள் இருக்கலாம், வரலாம். அதை களைவதற்கு ஒரே வழி, இது போன்ற முறையில் படங்கள் தொடர்ந்து தயாரிப்பதே. அப்போதுதான் குறைகளை அடையாளம் கண்டு தீர்க்க முடியும்.

வெளிப்படையான டிக்கெட் விற்பனை காலத்தின் கட்டாயம். ஒரு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்பது தியேட்டர் டிக்கெட் விற்பனையில்தான் இருக்கிறது. அதுவும் இன்டர்நெட் உலகில் எதுவும் நொடியில் நம் கைகளில் கிடைக்கும் போது இது எப்போதோ செய்து இருக்கப்பட வேண்டிய விஷயம்.

கம்ப்யூட்டர் சர்வரில் இணைத்து விட்டால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் விற்பனையை நிமிடத்திற்கு நிமிடம் பார்க்க முடியும். இதனால் ஒரு படத்தின் வெற்றி/தோல்வி, லாப/நஷ்டம் துல்லியமாக கணக்கிட படுகிறது.

அதே போல் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம் வெளிப்படையான நிதி அறிக்கை, அதாவது அனைத்து பணப்பரிமாற்றங்களும் வங்கியின் வழியே மட்டுமே.

இந்த வெளிப்படைத்தன்மை படத்தில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பித்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை எல்லோருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க பெறுகிறது. அவரவர் தங்கள் நியாயமான பங்கை பெற்று கொள்ள வழி செய்யப்படுகிறது.

மேலே சொன்ன அனைத்து சீர்திருத்தங்களும் இதற்கு முன்பே பல வருடங்களாக பலரால் பேசப்பட்டவைதான். இரண்டு படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகிய நானும் சக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிக நண்பர்களிடம் பல சந்தர்ப்பங்களில் இதை எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் பற்றி ஏற்கனவே நிறைய விவாதித்து இருக்கிறோம்.

இந்த பேரிடர் காலத்தில் இதற்கு ஒரு வழி அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ வருடங்களாக நான் இதுசம்பந்தமாக பலரிடம் பேசியும் வேண்டுகோள் விடுத்தும், ஏன் அந்த முயற்சியில் நானும் இறங்கியும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் வெறும் பேசுபொருளாக தேக்க நிலையிலேயே இருந்தது. சரி, எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா!

இது வெறும் செய்தியாக மட்டும் கடந்துபோகாமல் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டுமே என்பதுதான் சினிமாவை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பும், ஆதங்கமும்.நேர்மையான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் ஆதரவுடனும்…

கே.எஸ். தங்கசாமி,
இயக்குநர் / தயாரிப்பாளர்

ராட்டினம் / எட்டுத்திக்கும் மதயானை

தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஏழை மக்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

மோகன் பஸ்வான், ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.

கொரேனா ஊரடங்கால் இவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனால் சொந்த ஊருக்கே செல்ல தீர்மானித்துவிட்டார் மோகன்.

தன் சொந்த ஊர் 1200 கி.மீ. தொலைவில் இருப்பதால் எப்படி செல்வது என யோசித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு சைக்கிளை வாங்கி அதில் செல்ல தீர்மானித்துள்ளார்.

தன் தந்தை மோகனை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி 7 நாட்கள் இரவும், பகலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இந்த செய்தியும் புகைப்படங்களும் வீடியோவும் வைரலானது.

இந்த செய்தி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அமைப்புக்கு தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.

சிறுமியின் இந்த தொடர் சைக்கிள் ஓட்டம் பற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் தெரிவித்துள்ளதாவது…

“ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்பது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல.

அந்தச் சிறுமியை அழைத்து கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அமர வைத்து சோதிப்போம்.

நாங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father

More Articles
Follows