தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் அதிவேமாக பரவி இந்தியாவில் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
இதனை தடுக்க மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று ஏப்ரல் 14ஆம் தேதியோடு அந்த 21 நாட்கள் முடிவடைந்து நிலையில் மேலும் 19 நாட்கள் (மே 3 வரை) ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி அடுத்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனால் விமானம், ரயில், பேருந்து சேவைகள் அனைத்தும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தான் என்றாலும் இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த ஒவ்வொரு மாநில மக்கள் (தொழிலாளர்கள்) கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தங்குவதற்கு சரியான இடமும் இல்லாமல் போதுமான உணவு கிடைக்காமலும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இதனிடையில் டெல்லியில் கடந்த சில வாரம் முன்பு பல்லாயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வந்தனர்.
நிறைய பேர் பசி கொடுமையால் சொந்த ஊருக்கு பல நூறு மைல்கள் நடந்தே சென்றனர்.
ரயில் மற்றும் பேருந்தை இயக்க வேண்டும் என பெருமளவில் ஒரே இடத்தில் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதுபோல் தற்போது மும்பையில் மற்ற மாநில தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்தது தங்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக இடைவெளி இல்லாத போராட்டத்தால் கொரோனா பரவலை அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவ தொடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் இந்த டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இரு மாநில சம்பவங்களையும் குறிப்பிட்டு கமல்ஹாசன் மோடி அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அவரின் இன்றைய பதிவில் “பால்கனி அரசு தரையில் நடப்பதை கவனிக்க வேண்டும். முன்பு டெல்லி, இப்போது மும்பை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை வெடிகுண்டை போன்றது. அது வெடிக்கும் முன்பு தணிக்க வேண்டும். கொரோனாவை விட பெரும் நெருக்கடியாக மாறும் முன் தடுக்க வேண்டும்” என கமல் பதிவிட்டுள்ளார்.
அதற்கு முந்தைய ட்விட்டர் பதிவில்…
ஊரடங்கு நேரத்தின் போதும், உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உழைக்கும் அத்தனை ஊடகத்துறை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வதந்திகள் பரவிடாமலும், சரியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உங்கள் பணி மகத்தானது.
உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Again Kamal warns Modi for extension of Lock down with out plan