என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இதுதான்..; நெகிழ்ச்சியில் வாணி போஜன்

என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இதுதான்..; நெகிழ்ச்சியில் வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இங்கு நடந்த இந்நிகழ்வில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது…

“இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மேலும் “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

Actress Vani Bhojan talks about her unforgettable moment in life

ரஜினி பட பிஸினஸ்.. உதயநிதியுடன் மீட்டிங்.. VFF என்பது விஷால் பிலிம் பேக்டரி அல்ல.. – விஷால் ஓபன் டாக்

ரஜினி பட பிஸினஸ்.. உதயநிதியுடன் மீட்டிங்.. VFF என்பது விஷால் பிலிம் பேக்டரி அல்ல.. – விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம் ‘எனிமி’.

விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.

படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருந்த நடிகர் விஷாலிடம்

உரையாடியதிலிருந்து …

நீங்கள் இருவரும் எப்படி எனிமி ஆகினீர்கள்?

நான் தான் ஆர்யாவை எனிமி ஆக்கினேன். முதலில் ஆனந்த் சங்கர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் தலைப்பு வைக்கபடவில்லை. கதை கேட்டவுடன் நான் தான் இந்த பாத்திரத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன்.

நாங்கள் ஏற்கனவே இரும்புதிரை படத்தில், அர்ஜூன் சார் கதாபாத்திரத்திற்கு நடிக்க ஆர்யாவை தான் அணுகினோம். ஆனால் ஆர்யா அப்போது அந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்யும் சூழ்நிலையில் இல்லை. எப்பொழுதும் வில்லன் கதாபாத்திரம் புத்திசாலிதனமாகவும், வலுவானதாகவும் இருக்கும் பட்சத்தில் படத்தில் ஹீரோ கதாபாத்திரமும் வலுவானதாக மாறும். இரும்புதிரை, திமிரு போன்று அமையும்.

நான் இதை சொல்லும் போது, ஆனந்த் அதிர்ச்சியடைந்தார். நீங்கள் இன்னொரு ஹீரோவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை என ஆனந்த் கூறினார். அவர் மீண்டும் திரைக்கதை வேலை செய்து, இறுதி வடிவத்தை கூறும் போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்படும்.

அப்புறம் தான் எனிமி தலைப்பு வைத்தோம். இதை விட சிறந்த டைட்டில் இல்லையென்று முடிவு செய்தோம்.

ஆர்யா உங்களுடைய சிறந்த நண்பன் இந்த படத்தில் எனிமியாக எப்படி நடித்தார்?

ஆர்யா எதற்கு சர்பட்டா பண்ணான் என இப்போது தான் புரிந்தது. படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அவர் என்னை அடிக்க வேண்டும். நான் முகத்தை மூடிட்டு இருக்கேன். அவன் என் ரிப்ஸ்-ல் அடித்து கொண்டிருக்கிறான். நான் போதும், போதும் என சொல்லிகொண்டே இருக்கிறேன்.

அவன் அந்த பாக்ஸிங் ரேஞ்சில் இருந்து மாறவில்லை. அவன் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்-ற்கு கூட செல்லலாம். 4 வருடமாக டிரெய்னிங் எடுத்துகொண்டான். அவன் போட்டிக்கு செல்லும் அளவு தகுதியில் இருக்கிறான்.

கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு சிறந்த எக்ஸ்பீரியன்சாக இது இருக்கும். இதை நாங்கள் இருவரும் மீண்டும் நடிப்பதற்கு பல காலம் எடுக்கும். நான் பாலா சார் செய்த ‘அவன் இவன், ஹரி சார் உடன் செய்த தாமிரபரணி போல், இந்த திரைப்படம் அதுவாக தானாக அமைந்தது.

படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படம் போல் இருக்கும். படத்தின் VFX, இசை என எல்லாம் இணைந்து படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது . படத்தை இசையுடன் பார்த்த பிறகு, நான் ஆனந்தை கட்டிபிடித்தேன். பிறகு வெளியே வந்து, தயாரிப்பாளர் வினோத்திடம் இந்த படத்தை தயவுசெய்து தியேட்டருக்கு கொண்டு வாருங்கள் என கூறினேன். நான் அவருக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்.

அவர் நினைத்திருந்தால், ஓடிடிக்கு கொடுத்து லாபம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் எங்களது கோரிக்கையை ஏற்று படத்தை புரிந்துகொண்டு, தியேட்டருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். படத்தில் கிளைமேக்ஸ் தான் சிறப்பாக இருக்கும். படபிடிப்பின் போது, இருவருக்கும் ரத்த காயம் தான் அதிகமாக ஏற்பட்டது. இருவரும் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை சென்று வருவோம்.

இருவரும் நண்பர்கள், ஆனால் திரையில் எப்படி சிரியஸாக நடித்தீர்கள்?

படத்தில் என் பெயர் சோழா. அவன் என்னை சோஜன் என அழைப்பான். படம் முழுவதும் அப்படியே இருக்கும். படத்தில் இயக்குனர் இருவருக்கும் சரிசமமாக இடம் கொடுத்துள்ளார். படத்தில் நான் ஆர்யாவிற்கு ஆலோசனை கூறுவேன். அவன் எனக்கு கூறுவான். இதன் பிறகு நாங்கள் மீண்டும் எதாவது படத்தில் சேர்ந்தால் அது இதை விட பெரியதாய் இருக்கும்.

படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் பற்றி தயாரிப்பாளர் கூறினார், நீங்கள் அதற்கு எதுவும் குரல் கொடுக்கவில்லையே?

குரல் கொடுக்கவில்லை என இல்லை. 10 வருடங்களுக்கு முன்னால் தீபாவளிக்கு 4 படங்கள் வரும் அப்போது 1200 தியேட்டர்கள் இருந்தன. இப்போது இயங்கும் தியேட்டர்கள் 900 தான் இருக்கும். தயாரிப்பாளர் வைத்த விண்ணப்பம் 250 தியேட்டர்கள் போதும் என நியாமான கோரிக்கையை தான் வைத்தார். தயாரிப்பாளர் வினோத் 250 தியேட்டர்கள் வேண்டும் என கேட்டதில் தவறில்லை.

இதற்காக பின்னர் நாங்கள் உதயநிதியிடம் பேசினோம். இப்போது உறுதியான தியேட்டர்களின் எண்ணிக்கை 242. கொஞ்ச நேரம் முன் தான் ஒரு தியேட்டர் உறுதியானது.

இப்போது சினிமாவில் சோலோ ரிலீஸ் என்பது வாய்ப்பே கிடையாது. ரஜினி சாருக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது அவர் படங்களின் பட்ஜெட் அப்படி, வியாபாரம் அப்படி.

இந்தப் படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்கேலில் தான் தயாரித்துள்ளோம், அதற்கான வெளீயீடும் இதற்கு தேவை அது இப்போது நடந்திருக்கிறது. சந்தோஷம்.

முன்பை போல் விஷாலை அதிகம் வெளியில் பார்க்க முடிவதில்லையே , உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்து விட நினைக்கிறீர்களா ?

அப்படியெல்லாம் இல்லை வேலையை எப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இப்போது நடிகர் சங்க வேலைகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். கூடிய விரைவில் இறுதி தீர்ப்பு வரப்போகிறது இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது. இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. கண்டிப்பாக அதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன்.

அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளியாக இருக்குமா ?

அஜித் சார் படம் பற்றி கேட்கிறீர்களா ? ( சிரித்து விட்டு) எனக்கே தெரியவில்லை. என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள். நடக்கும் போது அதுவே தானாக நடக்குமென நம்புகிறேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும்.

தொடர்ந்து உங்கள் சொந்த தயாரிப்பில் நடித்துவிட்டு, இப்போது வெளித்தயாரிப்பில் நடிப்பது எப்படி இருக்கிறது ?

ரொம்ப நன்றாக இருக்கிறது இப்போது அடுத்த படமும் வினோத் உடன் இணைகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் நடிகருக்கு ஒரு புரிதல் வேண்டும். அது வினோத்திடம் இருக்கிறது.

சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ரசித்து ரசித்து செய்கிறார். அவருடன் வருடம் ஒரு படம் செய்வதாக சத்தியம் செய்து தந்திருக்கிறேன்.

விஷால் ஃபிலிம் பேக்டரியில் ‘வீரமே வாகை சூடும்’ கிட்டதட்ட முடிந்து விட்டது. ஜனவரி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். வெளி தயாரிப்பிலும் நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமா நன்றாக இருக்கும்.

துப்பறிவாளன் 2 எப்போது ?

இதோ ஜனவரியில் மீண்டும் போகிறோம் ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும்.

அந்தப்படம் உங்கள் சொந்த தயாரிப்பாக இருக்குமா ?

கண்டிப்பாக VFF நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வெறும் 10000 ரூபாய் கையில் வைத்து கொண்டுதான் VFF ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வென்ஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி. எனக்கு நடந்த துரோகங்கள் கோப்பைகளில் தான் இந்த நிறுவனமே ஆரம்பித்தேன் இயக்குநர் தவறு செய்யும்போது அதை சரிசெய்ய வேண்டியது என் கடமை. துப்பறிவாளன் 2 வுக்கு அவரை லண்டனுக்கு கூட்டி சென்றிருக்க கூடாது அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்.

நிறைய துரோகங்கள், கூட இருந்தவர்களே குழி பறிப்பது இதைப்பற்றியெல்லாம் உங்கள் கருத்து ?
நல்ல விசயம் தான் அரசியலுக்கு வரும் முன்னர் இதைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிற விசயங்கள் பள்ளியிலோ புத்தகத்திலோ கிடைக்காது. இது மாதிரி சம்பங்கள் தான் பாடத்தை கற்றுக்கொடுக்கின்றது.

நடிகர் சங்கம் இந்த வருடம் நிறைவடைந்து விடுமா ?

ஒரு நாலுமாதம் டைம் கொடுத்திருந்தால் அப்போதே முடித்திருப்போம் அனைத்துமே முடிந்துவிட்டிருந்தது. இப்போது அதில் போட்டிருந்த கம்பிகளெல்லாம் துருப்பிடித்து கிடக்கிறது. இப்போது சரி செய்யவே 12 கோடி ஆகும். அதைப்பார்க்க அந்தப்பக்கம் போகவே கஷ்டமாக இருக்கிறது. இதோ தீர்ப்பு வரப்போகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் சீக்கிரமே முடிந்து விடும்.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் குடும்பத்துடன் கவனமாக கொண்டாடுங்கள்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Vishal’s emotional speech at Enemy press meet

வார்த்தைகளின்றி நெகிழ்கிறேன்..; முதல்வரின் ‘ஜெய்பீம்’ பாராட்டுக்கு சூர்யா நன்றி

வார்த்தைகளின்றி நெகிழ்கிறேன்..; முதல்வரின் ‘ஜெய்பீம்’ பாராட்டுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யாவுடன் லியோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் அமேசான் ப்ரைமில் இன்று இரவு வெளியாகிறது.

இப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நேற்றைய தினம்‌ ‘ஜெய் பீம்‌’ படத்தைப்‌ பார்த்தேன்‌. அதன்‌ நினைவுகள்‌ இரவு முழுவதும்‌ மனதைக்‌ கனமாக ஆக்கிவிட்டன.

விளிம்புநிலை இருளர்‌ மக்களின்‌ வாழ்வியலையும்‌, அவர்கள்‌ அனுபவித்து வரும்‌ துன்ப துயரங்களையும்‌ இதனைவிடத்‌ துல்லியமாக, கலைப்பூர்வமாகக்‌ காட்சிப்படுத்த இயலாது என்பதைக்‌ காட்டிவிட்டீர்கள்‌.

நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்துப் புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும்‌ அது பார்வையாளர்‌ மனதில்‌ ஏற்படுத்திய தாக்கம்‌ என்பது மிகமிகக்‌ கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில்‌ சில காவல்‌துறை அதிகாரிகள்‌ செய்யும்‌ தவறுகள்‌, அந்தத்‌ துறைக்கே மாபெரும்‌ களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

அதே நேரத்தில்‌, உண்மையை வெளிக்கொண்டுவர இன்னொரு காவல்‌துறை அதிகாரியே துணையாக இருக்கிறார்‌ என்பதையும்‌ காட்டி இருக்கிறீர்கள்‌. நேர்மையும்‌, மனசாட்சியும்‌ கொண்ட அதிகாரிகளால்‌ உண்மை நிலைநாட்டப்படும்‌ என்பதையும்‌ காட்டி உள்ளீர்கள்‌.

சட்டமும்‌ நீதியும்‌ கொண்டு எத்தகைய அவலத்தையும்‌ துடைத்தெறிய முடியும்‌ என்பதையும்‌ எடுத்துச்‌ சொல்கிறது இந்தப்‌ படம்‌. ஒரு வழக்கறிஞர்‌ (சந்துரு), ஒரு காவல்‌துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும்‌ நினைத்தால்‌ சமூக ஒழுங்கீனங்களைத்‌ தடுத்து நிறுத்த முடியும்‌.

அமைதியான, அதே நேரத்தில்‌, அழுத்தமான வழக்கறிஞராக நண்பர்‌ சூர்யா திறம்பட நடித்துள்ளார்‌. நடித்துள்ளார்‌ என்பதைவிட, வழக்கறிஞர்‌ சந்துருவாகவே வாழ்ந்துள்ளார்‌.

இக்கதையைத்‌ தேர்வு செய்ததும்‌, அதனைப்‌ படமாக எடுத்ததும்‌, அதில்‌ தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்‌.

கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச்‌ சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர்‌ த.செ. ஞானவேல்‌ உள்ளிட்ட படக்குழுவினர்‌ அனைவருக்கும்‌ எனது பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதுபோன்ற படங்கள்‌ ஏராளமாக வரவேண்டும்‌ என்பதே எனது ஆசையும்‌ விருப்பமும்‌ ஆகும்‌.

இருளர்‌ குறித்த படம்‌ எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக்‌ கருதாமல்‌, பழங்குடியினர்‌ பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய்‌ நிதியினை நண்பர்‌ சூர்யா வழங்கியது என்னை நெகிழச்‌ செய்தது. இருளர்‌ வாழ்வில்‌ ஒளியேற்றும்‌ முயற்சியாகும்‌ இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும்‌ செய்ய வேண்டும்‌.

ஜெய் பீம்‌’ படம்‌ பார்க்க நான்‌ சென்றபோது சென்னை உயர் நீதிமன்றத்தின்‌ ஒய்வு பெற்ற நீதியரசர்‌ சந்துருவைச்‌ சந்தித்தேன்‌. (நீதியரசர்‌ என்று யாரையும்‌ சொல்லக்‌ கூடாது என்று சொல்பவர்‌ அவர்‌. ஆனாலும்‌ எங்களுக்கு அவர்‌ நீதியரசர்தான்‌) அவர்‌ என்னிடம்‌ நீதியரசர்‌ இஸ்மாயில்‌ ஆணையத்தின்‌ அறிக்கையைக்‌ கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள்‌ கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின்‌ அறிக்கை அது. காவல்‌ நிலையம்‌ ஒன்றில்‌ நடந்த இதேபோன்ற தாக்குதல்தான்‌ சென்னை மத்திய சிறையில்‌ 1976 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 2 ஆம்‌ நாள்‌ இரவு எனக்கும்‌ நடந்தது.

என்‌ மீது விழுந்த பல அடிகளைத்‌ தாங்கியவர்‌ சிட்டிபாபு. அதனால்‌ அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள்‌ அனைத்தும்‌ நேற்று ‘ஜெய் பீம்‌’ பார்த்துவிட்டு வெளியில்‌ வந்தபோது என்‌ மனக்கண்‌ முன்‌ நிழலாடியது.

இப்படிப் பல்வேறு தாக்கங்களை என்னுள்‌ ஏற்படுத்தக்‌ காரணமான ‘ஜெய் பீம்‌’ படக்‌ குழுவினருக்கு எனது பாராட்டுகள்‌! நண்பர்‌ சூர்யாவுக்கு எனது வாழ்த்தும்‌ நன்றியும்‌”- எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்… முதல்வரின் பாராட்டுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

“வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது.

ஜெய் பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!” எனச் சொல்லியிருக்கிறார்.

Suriya thanked TN CM MK Stalin for praising his film Jai Bhim

40 ஆண்டு அனுபவம்.. 3 கின்னஸ் சாதனை.. 100 விருதுகள்..; தற்போது செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

40 ஆண்டு அனுபவம்.. 3 கின்னஸ் சாதனை.. 100 விருதுகள்..; தற்போது செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும். இந்த விருதை பெறுவதற்கு பெருமிதம் கொள்வதாக தாமு கூறினார்.

“என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

“கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

தாமு, உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞர் ஆவார். இத்துறையில் அவர் இரண்டு சதாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.

தற்போது அவர் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தாமுவை, இன்ஸ்டாகிராமில் 500,000 க்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் சத்துணவு திட்டத்தில் புதிய மெனு வகைகளை அறிமுகப்படுத்திய பெருமை தாமுவுக்கு உண்டு. இதற்காக 1.5 லட்சம் பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

Chef Damu to receive International Honour

இஸ்லாமிய தாயின் பாலை குடித்தவர் தேவரய்யா…; ‘தேசிய தலைவர்’ பட நாயகன் பஷீர் உருக்கம்

இஸ்லாமிய தாயின் பாலை குடித்தவர் தேவரய்யா…; ‘தேசிய தலைவர்’ பட நாயகன் பஷீர் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் ‘தேசிய தலைவர்’ இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது.

இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஒ டைமண்ட் பாபு. கே.எஸ்.கே செல்வா.

தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் உள்ள சிகரம் அரங்கில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கதாநாயகன் ஜே.எம்.பஷீர் பேசியதாவது:

இன்று தேவரய்யாவின் குருபூஜை. அவருடைய காலடியை தொட்டு வணங்கி பேசுகிறேன். தேசிய தலைவர் படம் எப்படி உருவானது என்றால் என்னுடைய நண்பர் சவுத்ரிதான் என்னிடம் இதை கூறினார். இந்த படத்தை இயக்க அரவிந்தராஜ் சாரிடம் பேசினேன். பிறகு எனக்கு கெட்டப் போட்டு பார்க்கப்பட்டது. இதில் ஒவ்வொரு விஷயத்திலும் தேவரய்யாவின் ஆசி இருந்தது. சில சமயம் இந்த படம் நடக்க முடியாமல் போகவிருந்த நேரத்தில் எனக்காவும் தேவரய்யாவுக்காகவும் என்னுடைய நண்பர்கள் ஜல்லிகட்டு மூவிஸ் என்ற கம்பெனியை இந்த படத்துக்காக உருவாக்கினர்கள்.

எம்.எம்,பாபு,, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி இணைந்து இந்த படத்தை எடுக்க முன்வந்தார்கள் எத்தனை செலவானாலும் பரவாயில்லை இந்த படத்தை எடுங்கள் என்று சொன்னார்கள்.

முதன்முதலில் டத்தோ ராதாரவியை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு காரணம் அவருக்கு தேவரய்யா மீது அவ்வளவு பெரிய பற்று. அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜா சார், இசைஞானி போன்ற பெரிய ஜாம்பாவன்களை அய்யா இந்த படத்தில் தானாக சேர்த்துக்கொண்டார். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அய்யா சமாதிக்கு சென்று ஆசி பெற்று படத்தை தொடங்கினோம்.

தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்கவும் முடியாது என்ற வரிகளை சினேகன் எழுதி உள்ளார்.அவருக்கு பட தரப்பினர் சார்பில் நன்றி. தமிழ் சினிமா வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

நான் இஸ்லாமியானாக பிறந்து சினிமாவில் நிறைய பயணித்திருக்கிறேன். எங்கும் ஒரு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை. அப்போது அய்யாவின் கதாபாத்திரம் எனக்கு அமைந்தது. நூறு படம் நடித்திருந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்காது. ஐய்யாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்று என் தலையில் எழுதி இருக்கிறது. அதனால் நடிக்கிறேன். இஸ்லாமிய தாயின் தாய்ப்பாலை குடித்து வளர்ந்தவர் தேவரய்யா. அந்த ரத்த பாசம், ஏதோவொரு ஜென்மத்தில் நான் அவருக்கு வேலைக்காரனாக பிறந்திருக்கலாம். அதனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஐய்யாவின் மறைக்கப்பட்ட வரலாறு எங்கும் தவறு செய்யாமல் இயக்குனர் செய்திருக்கிறார். இதற்கு முழுவதுமாக ஆதரவு தந்தவர்கள் என் தயாரிப்பாளர்கள் தான். அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள் இதுவரை கணக்கு பார்த்ததில்லை அதற்காக அவர்களுக்கு என் சார்பிலும் இயக்குனர் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

டத்தோ ராதாரவி பேசியதாவது:

இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பஷீருக்கு என்னுடைய நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் தேசிய தலைவர் படத்தில் இணைந்திருக்கிறோம். இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையாஜா இணைந்திருப்பது வரப்பிரசாதம் இப்படத்தில் இடம் பெரும் தேவரய்யா பாடல் வைரலாகி விட்டது. சினேகன் அற்புதமாக எழுதி இருக்கிறார். என்னுடைய வீட்டில் தேவரய்யா படத்தை வைத்து கும்பிடுகிறேன். அதேபோல் என்னுடைய அப்பா அம்மா படம், பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும்.

பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது அய்யா முத்தராமலிங்க தேவர்தான். அவரை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்கள். உடனே தேவரய்யா அவர்கள் இங்கு நான் பேசி முடிப்பதற்க்குள் அபேட்சகர் (வேட்பாளர் )வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று சிம்ப்ளாக சொன்னார். பிறகு அவர் பேசி முடிப்பதற்குள் அவரை காரில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள். அப்படியோரு மனிதார் தேவரய்யா.

என் அப்பாவுக்கும் அவருக்குமே சின்ன கசப்பு ஏற்பட்டது பின்னர் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். முத்துராமலிங்க தேவர் அய்யா படத்தை நான் ஏன் கும்பிடுகிறேன் என்றால் அவர் ஒரு வீரம் விளைந்த மண். முத்துராமலிங்க தேவர் சாதாரணமாகத்தான் பேசுவார், மரியாதையாக பேசுவார். ரஜினிகாந்த்திடமே அவரது பேச்சை கொடுத்திருக்கிறேன்.

தேவரய்யா இனத்துக்கே பெரிய வீரமுண்டு. தேசிய தலைவர் படத்தில் வக்கீலாக நடிக்கிறேன். தேவரய்யாவை விடுதலை செய்ய வாதாடும் வக்கீலாக நடிக்க வேண்டுமென்றார்கள் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நந்தனத்திலும் மதுரையில் இருக்கும் தேவரய்யா சிலையில் கம்பீரமாக இருக்கும். மதுரையில் இருக்கும் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை மட்டும் தான் வைக்க வேண்டும். வேறு யார் பெயரையும் வைக்கக் கூடாது.

தயாரிப்பாளர் எம்.எம். பாபு பேசும்போது ,’ தேசிய தலைவர் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, பிஆர் டைமண்ட் பாபு அனைவரையும் வரவேற்றனர்.

முன்னதாக படத்தில் இடம்பெறும் இசைஞானி இசையில் அற்புதமாக உருவான, ’தேவரை போல யாரும் பொறக்கவுமில்லை பொறக்க போறதுமில்லை’ என்ற பாடல் திரையிடப்பட்டது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டனர். விரைவில் மற்ற பாடல்களுடன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Actor JM Basheer emotional speech at Desiya Thalaivar audio launch

நல்லவனா இருந்து என்னத்த கண்ட..; தேவரய்யா வரலாறை படிச்சா இப்படி சொல்ல மாட்டீங்க – அரவிந்த்ராஜ்

நல்லவனா இருந்து என்னத்த கண்ட..; தேவரய்யா வரலாறை படிச்சா இப்படி சொல்ல மாட்டீங்க – அரவிந்த்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் ‘தேசிய தலைவர்’ இசை வெளியீடு

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது.

இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஒ டைமண்ட் பாபு. கே.எஸ்.கே செல்வா.

தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் உள்ள சிகரம் அரங்கில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.

விழாவில் திரைப்பட இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் பேசியதாவது:

இன்றைக்கு நமது கதையின் கதாநாயகன் மறைந்த தேவரய்யாவின் 114 பிறந்த நாள். இந்நாள் ஒரு சிறப்பான நாளாகும். அவர் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாள்.. ஒரு சிலருக்குத்தான் இந்த பாக்யம் கிடைக்கும். குருவுக்கும் சித்தருக்குதான் இதுபோன்ற நாள் கிடைக்கும் என்கிறார்கள்.

அவர் ஒரு சித்தராக வாழ்ந்தார். அதனால்தான் அவரது பிறந்த நாளையும் இறந்த நாளையும் தேவரின் குரு பூஜை என்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

தேவர் என்று சொன்னாலே இன்றைய இளைஞர்களுக்கு தேவர் பெயர் கேள்வி பட்டிருக்கிறேன் நந்தனத்தில் சிலை இருக்கிறது. என்பது மட்டும்தான் தெரிகிறது, ஆனால் தேவரய்யா இந்திய விடுதலைக்கு அவரது பங்கு எப்படிப்பட்டது, அரசியலில் நேர்மையான, உண்மையான, தூய்மையான அரசியல்வாதியாக அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார் என்பதையெல்லம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.

தேவரய்யா பற்றி படிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எனக்கு மட்டுமல்ல எல்லோர் மனதிலும் இருப்பது. நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன் நல்லவனாக இருந்து என்னத்தை கண்டேன். நல்லவனாக இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் தான் வருகிறது. என்று எண்ணுவேன்.

தேவரய்யா வரலாற்றை நான் படிக்கும்போது அவர் எந்தவொரு இடத்திலும் தன்னுடைய கொள்கையையோ நேர்மையையோ தூய்மையையோ கைவிட்டதில்லை. அப்போதுதான் எனக்கு ஒருபெரிய உண்மை தெரிந்தது. தேவரய்யா காலத்தில் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறர்கள். எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் பலர் மறக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தேவரய்யா பற்றி இன்றளவும் நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர் வாழ்ந்த உண்மையான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசுதான் அது. அந்த வரலாறு எந்தவிதத்திலும் சிதைந்துவிடாமல் தேசிய தலைவர் படத்தில் நன்றாக சொல்லப்பட வேண்டும் என்ற முனைப்போடு தயாரிப்பளர்கள் இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம்… இந்த படத்துக்கு யாரை இசை அமைப்பாளராக போட வேண்டும் என்ற பேச்சு வந்தபோது நான் இசைஞானி இளையாராஜா போடலாம் என்றேன்.

ஏனென்றால் ராஜ சார்தான் போற்றி பாடடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் தந்தவர். இன்றைக்கு காலை கூட எல்லா இடத்திலும் அந்த பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர் ஏற்படுத்தின அந்த வரலாற்றை உடைக்க வேண்டுமென்றால் அவரால் மட்டும்தான் முடியும் அதனால் ராஜாசார் பண்ணாதான் நல்லா இருக்கும் என்று சொன்னவுடனே அதற்கு எல்லோரும் உடன்பட்டனர்.

உடனடியாக ராஜா சாரைபோய் எல்லோரும் பார்த்தோம். அதற்கு நம்ம டைமண்ட் பாபு சார்தான் மிகப்பெரிய உதவியாக இருந்தார். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் நான் கிட்டதட்ட 15 படங்களுக்கு மேல் செய்திருக்கிறேன். நான் ராஜா சாரிடம் பண்ணுகிற முதல் படம் இது. அந்த வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஏற்படுத்தி கொடுத்தார்கள் அதற்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டை பார்த்தோம் முதல் தடவையாக ராஜா சாரோட உட்காந்து பாட்டை பார்க்கும்போது எனக்கு சின்ன உதறல்தான். அவர் ஒரு சீனியர் என்பதால்தான் இந்த உணர்வு இருந்தது. ஆனாலும் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்கக்கூடாது என்று சொன்னேன். நம்ம கேட்கிற விஷயங்களை கூட அவர், உனக்கும் ஞானம் இல்லடா என்று சொல்லாமல் மாற்றங்கள் செய்து கொடுத்தார். அது பெருமையாக இருந்தது.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நம் பஷீர் சாரின் நண்பர் சவுத்ரி என்பவர் இந்த கதையை நாம் செய்யலாம் தேவர் விழாவுக்கு நல்ல இருக்கும் என்றார். அவர் தந்த புத்தகங்களை படிக்க படிக்க எனக்குள் ஆர்வம் பெருகியது. தேவரய்யா பற்றிய படமோ, டி வி சீரியலோ செய்யணும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது இவ்வள்வு பெரிய ஒரு பொக்கிஷமாக கிடைக்கும் என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அதற்கு மீண்டும் ஒருமுறை தயாரிப்பாளர்களுக்கும். பஷீர் சாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அரவிந்தராஜ் பேசினார்.

Director ArvindRaj praises Muthu Ramalinga Devar in recent function

More Articles
Follows